படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்த டேவிட் தன் கண்களை கசக்கி, கசக்கி தெளிவடைய முனைந்தான், ஆனால் தோற்றான். நேற்று தன் நாதேறி நண்பர்களோடு நட்டுவைத்த ஓல்ட் மங்க் ரம்மை முட்ட முட்ட குடித்தால் வந்த சோதனை. ஹான்கோவெர் இல் இருந்து மீள அவன் மூளை தயாராக இல்லை.
முயற்சி செய்து சுவர் கடிகாரத்தை பார்த்து, பாடையில் ஏறிய பாடி போல் சிலையானான். அடுத்த நொடியே வெடித்த இளவன் காயில் இருந்து பறக்கும் பஞ்சு போல் பறக்கலானான்.
மணியோ காலை 10.43 , திரை கடல் ஓடி மொபைலை எடுத்தான். அதில் 43 மிஸ்ஸுடு கால்கள், அதை கண்ட அவன் கால்களும் நடுக்கம் கண்டது. ஓடோடி டாய்லெட்டுக்கு பதில் பாத் ரூமில் நுழைந்தான், நுழைந்த பின் எதற்கு இங்க வந்தோமென்று குழம்பி, பின்பு தெளிவாகி, குளித்து, பிறகு சரியாக டாய்லெட் சென்று, அதையும் முடித்து கிளம்பினான்.
அதற்குள் ஏழு மிஸ்ஸுடு கால்கள்!! ஐயையோ என்று வாய் பிளந்ததால், பல் துலக்காதது பளிச் என்று மூக்கிற்கு பட்டதால், பாய்ந்து சென்று சுவிங் கம் எடுத்து பாக்கெட்டில் இட்டு, பைக்கை முடிக்கினான்.
எப்படியோ 60 மிஸ்ஸுடு கால்கள் ஆவதற்குள் இலக்கை அடைந்தான். பைக்கின் சைடு ஸ்டான்ட் பாதியாய் போட்டு, சாவி எடுக்காமல், ஒரு இண்டிகேட்டர் இரும விட்டு விட்டு உள்ளே ஓடினான்.
அங்கே எரிந்து கொண்டிருந்தது ஒரு தங்கத் தாமரை. புலிபோல் பாய்ந்து பூனை குரலில் ஹாய் என்றான், லஷ்மியை பார்த்து.
லக்ஷ்மி : என்ன பார்த்த உனக்கு எப்படி தெரியுது?
டேவிட் : இல்ல லக்ஷ்மி பத்து மணிக்குள்ள முடிஞ்சிரும்னு நெனைச்சேன் ஆனா கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.
லக்ஷ்மி : பாவி!! கொஞ்சமாட லேட் ஆச்சு?
டேவிட் : ம்ம் புரியுது...
லக்ஷ்மி : இன்னைக்கு சனிக்கிழமை தான, சர்ச்சும் கிடையாது. எங்க போய் பொறிக்கிண்டு வந்த?
டேவிட்: நீ வேர, சர்ச்சுக்கு தான் போனேன், ஒரு விசேஷ கூட்டம் இருந்தது.
லக்ஷ்மி : ஒ! உபவாச ஜெபமா??
டேவிட் : ம்ம்ம் அப்படியும் வச்சுக்கலாம்.
லக்ஷ்மி : ஏன் இத முன்னாடியே சொல்லல? எனக்கு எவ்வளவு கஸ்டமா இருக்கு தெரியுமா. இந்த ஒரு மணி நேரமா, யார் யாரோ வரா,ஒரு மாதிரி பாக்கிறா. சிலர் லிப்ட் வேனுமான்க்ரா. எங்க அப்பாவுக்கு தெரிஞ்ச மனுஷாலெல்லாம் பார்த்தா. யாரவது அப்பாகிட்ட போய் சொன்னா, அதோ கதி தான். நீ பாட்டுக்கு சர்ச்சு, கிர்ச்சு சொல்லுற. உன்ன நெனச்சாலே அப்படியே பத்திண்டு வர்றது.
டேவிட்: ம்ம்ம் புரியுது.
லக்ஷ்மி : புரிஞ்சு என்பன்றதாம்?
டேவிட்: "மௌனம்"...
லக்ஷ்மி : நான் பேச ஆரம்பிச்சா மட்டும் ஊமக் கோட்டான மாறிற..
டேவிட் : "மௌனம்".
லக்ஷ்மி : என் சும்மாவே இருக்க? எதாஞ்சு சொல்லு டா?
டேவிட் : "மௌனம்"..
லக்ஷ்மி : ஐயோ பத்திண்டு வர்றது!!!!
டேவிட் : "மௌனம்"
லக்ஷ்மி : என்ன பாத்தா வன பத்திரகாளி மாதிரி தெரியரனா? வாய் தெறந்து பேசு டா மூதேவி?
டேவிட் : என்னக்கு பத்திரகாளி, கித்திரகாளி எல்லாம் தெரியாது!
லக்ஷ்மி : ஒ! அப்ப நான் மட்டும் தான் உங்க சாமி பத்தி தெரிஞ்சிருக்கணும். ஆனா நீ மட்டும் தெரிஞ்சுக்க பிடாது? அப்படித்தான?
டேவிட் : இல்ல இல்ல, உங்களுக்கு ஆயிரக் கணக்கான சாமிகள் இருக்கு. அதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு சொல்லுறேன்.
லக்ஷ்மி : தெரியாதா? இல்ல தெரிஞ்சுக்க விருப்பம் இல்லியா?
டேவிட்: "மௌனம்"...
லக்ஷ்மி : நீ மௌனம் சாதிக்கிறத பாத்தா பசி மயக்கம் போல இருக்கே?
டேவிட் : அதெல்லாம் ஒன்னும் இல்ல கலையில தான் நேத்து வாங்கின பிரியாணி, மட்டன் சுக்கா எல்லாம் வெளுத்து கட்டிட்டு வந்தேன். தெரிஞ்சுக்கோ.
லக்ஷ்மி : டேய்!! அப்போ உபவாச ஜெபம்ன்னு சொன்னது போய்! உபவாசம்ன விரதம் தானே? சோ, நீ காலையில சர்ச்சுக்கு போகல? அப்போ எங்க இருந்து வர்ற? உன்ன நெனச்சாலே அப்படியே பத்திண்டு வர்றது!!!!!!!!!!! உண்மைய சொல்லு டா?
டேவிட் : ஓகே. என் ரூம் மேட் சிவாவோட ட்ரீட். அவனுக்கு ப்ரோமோஷன். அவன் சந்தோசத்தில பங்கு எடுகிலன்னா வருத்தபடுவேன்னா, அதுதான் கொஞ்சமா குடிச்சேன்.
லக்ஷ்மி : அட சண்டாள, குடுச்சியா? பத்திண்டு வர்றது டா பாவி!
டேவிட் : "மௌனம்"..
லக்ஷ்மி : எனக்கு எவ்வளவு பேர் ப்ரொபோஸ் பண்ணா, எல்லாரையும் வேண்டானுட்டு உன்ன புடிச்சேனே, என் புத்திய சொல்லணும்.
டேவிட் : சும்மா நிறுத்து லக்ஷ்மி! என்னக்கு மட்டும் ப்ரோபோசல் வருலியா?
லக்ஷ்மி : ஒ! அப்போ என்ன போன போகுதுன்னு தான் லவ் பண்ணினியா? சொல்லுடா அசமந்தம்...பத்திண்டு வர்றதே...
டேவிட் : "மௌனம்"..
லக்ஷ்மி : உன் லவ்வுக்கு ஓகே சொல்லறதுக்கு முன்னாடி குட்டி போட்டா பூனை போல முட்டின்டே வருவே? இப்போ கசக்குதோ?? நேத்து ராத்திரி போன் பண்ணினே ஏன் சொல்லல?
டேவிட்: ஒரு ரௌண்டு தான் லச்சு. ஒரு ரவுண்டேல்லாம் சரக்குன்னு கணகெடுதுக்க மாட்டோம்.
லக்ஷ்மி : லச்சு, கிச்ச்சு சொன்னா பல்ல கழட்டிடுவேன். நூட்லஸ் சாபிட்டத சொன்ன, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக்கு சாபிட்டத சொன்ன. ஆனா தண்ணி அடிச்சத மட்டும் ஏன் சொல்லல?
டேவிட் : அதான் சொன்னேனே, அடிச்சது தண்ணியே இல்ல, சும்மா.....
லக்ஷ்மி : சரி காலையில போன் பண்ணினேனே ஏன் எடுக்கல?
டேவிட் : போனா?
லக்ஷ்மி : டேய் புளுகு மூட்டை, அப்படியே பத்திண்டு வர்றது டா...
டேவிட் : இல்லடா செல்லம்...
லக்ஷ்மி : டேய் சும்மா இரு டா..கோவத்த கெளறாத..செல்லம் சொல்லாத...சரியா 60 மிஸ்ஸுடு காள்ல்ஸ் விட்டேன்..அதுவும் புல் ரிங் விட்டேன்..போய் சொல்லாம சொல்லு?
டேவிட் : இல்லம்மா, சத்தியம்மா கால் வரலம்மா..சொன்னா நம்பு..
லக்ஷ்மி : பத்திண்டு வர்றது டா!! கால் பண்ணின நான் என்ன ஜடமா?
டேவிட்: நீ நம்பித்தான் ஆகணும்.
லக்ஷ்மி : சரி நம்புறேன், மொபைல குடு.
டேவிட் : இந்தா புடின்னு ஓதரிகிட்டே குடுத்தான்..
லக்ஷ்மி : டேய் ஆமான் டா..மிஸ்ஸுடு காலே இல்ல?
டேவிட் : அதான் சொன்னேனே..
லக்ஷ்மி : ஓகே. ஆனா கால் ஹிஸ்ட்ரில...அதென்ன பேரு இது.. PART HINDU VARTHU ? நேரிய தடவ கால்ஸ் வந்திருக்கு?
டேவிட் : அது என் உறுப்படாத பிரெண்ட் வரதராஜன், ஹிந்து ஆபீச்ல பார்ட் டைம்ல வேலை பண்ணுறான்.
லக்ஷ்மி : சரி சரி. உன் மொபைல ஏதோ பால்ட் இருக்கு..செக் பண்ணு டா..
டேவிட் : சரி லக்ஷ்மி.
லக்ஷ்மி : அதென்ன மூணா மனுஷாள கூப்பிடற மாதிரி கூப்பிடுற? செல்லமா லச்சுன்னு கூபிடுடா?
டேவிட் : சரி லச்சுன்னு சிருச்சேன். மனசுக்குள்ள இன்னும் வேகமா வாய் விட்டு சிருச்சேன். ஏன்னா, இந்த லூசு மாமிக்கு அவ செல்ல பேர் "பத்திண்டு வர்றது" ன்னு தெரியாது. அத விட காமெடி மொபைல அவ பேர "PART HINDU VARTHU " ன்னு தப்பா படிச்சு புரிஞ்சுகிட்டது...நல்ல வேலை தப்பிச்சேன், இல்லேனா ஒரு மணி நேரம் பத்திண்டு வர்றது!! பத்திண்டு வர்றது!! ன்னு ஒப்பாரி வச்சிருப்பா!!!!!!!!!
Thursday, 30 December 2010
Saturday, 18 December 2010
களமாடி
தன் இனம் காக்க
உயிரை ஒப்புவிப்பவன் களமாடி.
பகைவனை சூறையாட
உடம்பையே ஆயுதமாக்குவன் களமாடி.
அன்பான இருதயம் கொண்ட மனிதனை
களமாடியாக்கிய களவானியும் மனிதனே.
எங்கிருந்து வந்தது களவானிக்கு
இந்த மிருக குணம்.
தன் இனமற்றவனை கொன்று
குவிக்கும் அரக்க குணம்.
அறிவியல் வளர்த்த மனிதன்
பிற இனத்தவனை அன்பால் அரவணைக்க மறந்தான்.
ஒரு நாடு, ஒரு இனத்தை
கூண்டோடு கைலாசம் அனுப்ப
வெட்கங்கெட்டு பிற நாடுகளிடம்
பிச்சை கேட்கிறது.
அந்த இனத்தின் மகிமை தெரியாத
முட்டாள் அதிபர்களும் நேசக்
கரம் நீட்டுகின்றனர்.
இதை மக்களும் மதிகெட்டு
வேடிக்கை பார்கின்றனர்.
சிறுபான்மை இனமாக வாழ என்ன பிரச்னை?
சொல்கிறேன் கேளுங்கள்..
உங்கள் உடைமைகள் சில நேரம் சூறையாடப்படும்,
புகார் ஏற்றுக்கொள்ள மாட்டாது.
உங்கள் மொழி கூத்தியாலாக்கபடும்.
தேர்தலில் நிற்க முடியாது.
அதிபராக பெறும்பான்மை இனத்தை
சார்ந்த அயோக்கியனுக்கு மட்டுமே உரிமை உண்டு.
சிறுபான்மை மாணவனின் பாடத் தேர்ச்சி விகிதம்
மட்டும் 80 சதவிகதமாக இருக்கும்.
உயர் கல்வி நுழைவாயிலும் அடைத்தே இருக்கும்.
ராணுவத்தில் பணி புரிய அனுமதி மறுப்பு.
காவல்துறையிலும் கால் பதிக்க முடியாது.
இதைபோல் இன்னும் எவ்வளவோ...
கொடுமைகளை தட்டி கேட்பவன்
களமாடியாகிறான்.
இவனுக்கு தீவிரவாதி என்ற
செல்ல பெயரும் சூட்டப்படும்.
சண்டை மேலும் மூளும்போது
இழைக்கப்டும் கொடுமைகள் ஏராளம்.
சிலவற்றை உங்கள் பார்வைக்கு
படையளிடுகிறேன்..
நம் அக்காளையும், தங்கையையும்
தார்சாலையிலிட்டு கலவானிகளால்
கற்ப்பு களவாடப்படும்.
நம் அம்மாக்களின் மார்புகளை
அறுத்து காட்சி பொருளாக வைப்பர்.
நம் அண்ணன், தம்பியின் தொடையை
வெட்டி, மனித சதைக் கறியை மலிவாக விற்பர்.
பச்சிளம் குழந்தைகளை எறியும்
தார்சூலையில் வதக்கி எடுப்பர்.
களமாடிகளை நிர்வாணப் படுத்தி
சங்கிலியால் கட்டி, களவாணிகள் தங்கள்
கண்களை துணியால் கட்டி சுட்டு விளையாடுவர்.
கைதான களமாடிகளை பத்துக்கு பத்து அறையில்
அடைத்து அட்டகாசம் செய்வர்.
ஒரு அறையில் குறைந்தது நூறு பேரை இட்டு,
வியர்வை, மலம், மூத்திர துர்நாற்றத்தால்
மூச்சடைக்க வைத்து கதையை முடிப்பர்.
பெண் களமாடிகளுக்கு செய்யும் அசிங்கத்தை
எழுத என் பேணா தயங்கியதாள் நிறுத்திக் கொள்கிறேன்.
சுதந்திர காற்றை வரும் சந்ததி சுவாசிக்க,
களமாடிகள் தங்கள் சுவாசக் காற்றை விடுகிறார்கள்.
கொன்று புதைத்த பிணங்கள், நாளய போருக்காக
இடும் விதைகள் என்று அறியாது செய்கின்றனர்.
விலங்குகள் கூட பசிக்காக மட்டுமே வேட்டையாடும்.
இவர்களின் மனித வேட்டையை விளங்கிக்கொள்ள
முடியவில்லை.
உலக நாடுகளும் இதை பார்க்க மறுத்து
இரு கண்களையும் மூடிகொள்வதும்.
பலர் சொல்லத் துடிப்பதையும் கேட்க மறுத்து
இரு காதுகளையும் அடைத்துக்கொள்வதும்.
போர் நிறுத்த அறிவிபை சொல்ல மறுத்து
வாயை பொத்திக் கொள்வதை,
பார்க்கும் போது,
நான் ஏன் இன்னும் இந்த பாவலோகத்தில்,
உயிருள்ள பேசும், கேட்க்கும், பார்க்கும்,
நடை பிணமாக வாழவேண்டும் என்ற கேள்வி
நித்தமும் வருகிறது...
உங்களுக்கு?
உயிரை ஒப்புவிப்பவன் களமாடி.
பகைவனை சூறையாட
உடம்பையே ஆயுதமாக்குவன் களமாடி.
அன்பான இருதயம் கொண்ட மனிதனை
களமாடியாக்கிய களவானியும் மனிதனே.
எங்கிருந்து வந்தது களவானிக்கு
இந்த மிருக குணம்.
தன் இனமற்றவனை கொன்று
குவிக்கும் அரக்க குணம்.
அறிவியல் வளர்த்த மனிதன்
பிற இனத்தவனை அன்பால் அரவணைக்க மறந்தான்.
ஒரு நாடு, ஒரு இனத்தை
கூண்டோடு கைலாசம் அனுப்ப
வெட்கங்கெட்டு பிற நாடுகளிடம்
பிச்சை கேட்கிறது.
அந்த இனத்தின் மகிமை தெரியாத
முட்டாள் அதிபர்களும் நேசக்
கரம் நீட்டுகின்றனர்.
இதை மக்களும் மதிகெட்டு
வேடிக்கை பார்கின்றனர்.
சிறுபான்மை இனமாக வாழ என்ன பிரச்னை?
சொல்கிறேன் கேளுங்கள்..
உங்கள் உடைமைகள் சில நேரம் சூறையாடப்படும்,
புகார் ஏற்றுக்கொள்ள மாட்டாது.
உங்கள் மொழி கூத்தியாலாக்கபடும்.
தேர்தலில் நிற்க முடியாது.
அதிபராக பெறும்பான்மை இனத்தை
சார்ந்த அயோக்கியனுக்கு மட்டுமே உரிமை உண்டு.
சிறுபான்மை மாணவனின் பாடத் தேர்ச்சி விகிதம்
மட்டும் 80 சதவிகதமாக இருக்கும்.
உயர் கல்வி நுழைவாயிலும் அடைத்தே இருக்கும்.
ராணுவத்தில் பணி புரிய அனுமதி மறுப்பு.
காவல்துறையிலும் கால் பதிக்க முடியாது.
இதைபோல் இன்னும் எவ்வளவோ...
கொடுமைகளை தட்டி கேட்பவன்
களமாடியாகிறான்.
இவனுக்கு தீவிரவாதி என்ற
செல்ல பெயரும் சூட்டப்படும்.
சண்டை மேலும் மூளும்போது
இழைக்கப்டும் கொடுமைகள் ஏராளம்.
சிலவற்றை உங்கள் பார்வைக்கு
படையளிடுகிறேன்..
நம் அக்காளையும், தங்கையையும்
தார்சாலையிலிட்டு கலவானிகளால்
கற்ப்பு களவாடப்படும்.
நம் அம்மாக்களின் மார்புகளை
அறுத்து காட்சி பொருளாக வைப்பர்.
நம் அண்ணன், தம்பியின் தொடையை
வெட்டி, மனித சதைக் கறியை மலிவாக விற்பர்.
பச்சிளம் குழந்தைகளை எறியும்
தார்சூலையில் வதக்கி எடுப்பர்.
களமாடிகளை நிர்வாணப் படுத்தி
சங்கிலியால் கட்டி, களவாணிகள் தங்கள்
கண்களை துணியால் கட்டி சுட்டு விளையாடுவர்.
கைதான களமாடிகளை பத்துக்கு பத்து அறையில்
அடைத்து அட்டகாசம் செய்வர்.
ஒரு அறையில் குறைந்தது நூறு பேரை இட்டு,
வியர்வை, மலம், மூத்திர துர்நாற்றத்தால்
மூச்சடைக்க வைத்து கதையை முடிப்பர்.
பெண் களமாடிகளுக்கு செய்யும் அசிங்கத்தை
எழுத என் பேணா தயங்கியதாள் நிறுத்திக் கொள்கிறேன்.
சுதந்திர காற்றை வரும் சந்ததி சுவாசிக்க,
களமாடிகள் தங்கள் சுவாசக் காற்றை விடுகிறார்கள்.
கொன்று புதைத்த பிணங்கள், நாளய போருக்காக
இடும் விதைகள் என்று அறியாது செய்கின்றனர்.
விலங்குகள் கூட பசிக்காக மட்டுமே வேட்டையாடும்.
இவர்களின் மனித வேட்டையை விளங்கிக்கொள்ள
முடியவில்லை.
உலக நாடுகளும் இதை பார்க்க மறுத்து
இரு கண்களையும் மூடிகொள்வதும்.
பலர் சொல்லத் துடிப்பதையும் கேட்க மறுத்து
இரு காதுகளையும் அடைத்துக்கொள்வதும்.
போர் நிறுத்த அறிவிபை சொல்ல மறுத்து
வாயை பொத்திக் கொள்வதை,
பார்க்கும் போது,
நான் ஏன் இன்னும் இந்த பாவலோகத்தில்,
உயிருள்ள பேசும், கேட்க்கும், பார்க்கும்,
நடை பிணமாக வாழவேண்டும் என்ற கேள்வி
நித்தமும் வருகிறது...
உங்களுக்கு?
Monday, 6 December 2010
சொத்தைப் பல்
பத்து நாட்கள் படாத பாடு.
மோசமான நிலையில் என் கீழ் கடவாய்
பல்லின் நிலைப்பாடு.
பார்பவர்களும், கேட்பவர்களும்,
மனதோடு ஒத்த மனைவியும்,
எனக்காகவே பிறந்த மகளும் சொல்லும்
காரணம்...
இனிப்போடு நான் கொண்ட இணக்கமாம்.
பல்லை கடிக்க முடியாததால்,
நாக்கை கடித்து சொல்லுகிறேன்,
அது தவறான மூட நம்பிக்கை.
பற்சொத்தை யாரையும் தாக்கும்.
குழந்தை முதல் குமரி வரை.
குமரி முதல் கிழவி வரை.
இதில் ஆண்பாலும் அடக்கம்.
வெண் பற்கள் கொண்ட வீரசாமிக்கும் வரும்,
நிறம் தெரியாத முனியம்மாளுக்கும் வரும்.
என் பற்களும் வெண் நிறமே.
தினமும் இருமுறை பல்துலக்கியும்,
ஐந்து முறை பற்கால்வாய் சிகிச்சை செய்தும்,
ஆறாம் பல் என்னை கரகாட்டம் ஆட வைக்கிறது.
ஒவ்வொரு சிகிச்சைக்கு பின்பும்,
இனி வரும் முன் காப்பேன்!
என்று சூளுரை எடுத்தும், கடைபிடித்தும்
தோல்வியே கண்டேன்.
இம்முறை காரணம் கண்டறிய
குடும்பம் குழந்தை மறந்து,
கூகுளுக்குள் குதித்தேன்.
கண்டதை சொல்கிறேன்,
வீங்கிய பல் காறர்கள் வாங்கிக் கொள்ளுங்கள். பல்லின் பாதுகாவலன் எனாமல்.
பல்லின் அஸ்திவாரமோ பர்த்தந்தம்.
ஆயிரக்கணக்கான நுண்ணிய துவாரங்கள் கொண்டதே பல்.
துவாரத்தை பெரிது படுத்துவது சில துஷ்ட பக்டீரியாயாக்கள்.
பக்டீரியாயாக்கள் உயிரோடு உள்ளதை
வீங்கிய ஈர்கலே உறுதி செய்யும்.
சில நேரம் தங்கப் பற்களும் பறை சாற்றும்.
இயற்கையாகவே இந்த பக்டீரியாயாக்கள்
வீராசாமி வாயிலும், முனியம்மா ஏறிலும்
இருக்க வாய்ப்பு சாத்தியமே.
பக்டீரியா இன்னும் பெருக
கொஞ்சும் க்ளுகோஸ் தேவை.
அவை சர்கரயிலும் கிடைக்கும்,
சாதாரண கேரட்டிலும், அருசியிலும் கிடைக்கும்.
பெருக நினைக்கும் பக்டீரியாயாக்கள்
எச்சிலோடு ஒட்டி உறவாடி திரவமாக மாறும்.
மாறிவிட்டாலோ நம் பற்கள்
நேசம் கெட்டு, நிறமும் கெட்டு அல்லாடும்.
இந்த வேலையை இன்னும் சுலபம்
செய்ய நாம் லெமன் சூசோ அல்லது
ஆரஞ்சு சூசோ அடிகடி ரசித்து ரசித்து
குடித்தால் ரெடிமேட் திரவம்
நொடியில் ரெடி.
திரவமான துஷ்டன் மெதுவாக முதலில்
பல் எலும்பை துளைபோடும், பிறகு மெல்ல மெல்ல
பல்லின் மேல் புறத்தில் கருப்பு கொடியோடு
கொடுங்கோல் ஆட்சியை தொடங்கும்.
இதோடு கூட சாபிட்ட உடனே படுக்கைக்கு
சென்றால் 32 பல்லும் சொத்தையாகி பின்பு
செத்தும் போகும்.
மேலே சொன்ன அனைத்தையும் இடைவிடாமல்
நான் செய்த புண்ணியத்தால்.
இன்று ஒரு கருப்பு கர்ம வீரன்,
கடப்பாரை கொண்டு
மேலிருந்து கீழ்நோக்கி
தொட்டு தொட்டு
பர்தந்ததை பந்தாடுகிறான்.
இவனை கொன்று குவிக்க இன்னொரு
பற்கால்வாய் சிகிச்சையே தீர்வு,
தீர்க்கமாய் இருக்கிறேன்.
பல்லுள்ளவர்கள் பார்த்து நடக்க,
இந்த பல்குச்சியை சமர்பிக்கிறேன்.
Subscribe to:
Comments (Atom)
