வெகு நாட்கள் வெள்ளந்தியாய்
திரிந்து கொண்டிருந்த எனக்கு
அன்று தான் முதல் இரவு.
மந்தமான வெளிச்சம்.
அறையெங்கும் மஞ்சள் நிறமே
பரவிக்கிடந்தது.
அலங்கரிக்கப்பட்ட பழைய
கட்டில்.
பழுப்பு நிற பஞ்சு மெத்தை.
பூ போட்ட தலையணை.
கட்டில் சுற்றிலும்
மல்லிகை பூச்சரங்கள்
தோரணங்களாய்.
மெத்தைமேல் கவனமாக
சிதறி இருந்த மலராத
மல்லிகை மொட்டுகள்.
தட்டு நிறைய லட்டுகளும்,
பல மாதிரியான பழங்களும்,
பக்குவமாய் பரப்பி
இருந்தது.
சந்தன ஊதுபத்தியும்
சித்தத்தை சிலுப்பியது.
கசங்கிய வெண் பட்டு சட்டை,
கரை படிந்த வேஷ்டியோடு
நாற்காலியில் நாசூக்காய்
அமர்திருந்தேன்.
சிரித்த முகம்,
சிறுத்த உருவம்,
மாநிறமாய் இருக்கும்
மார்கண்டேயன் நான்.
இருந்தும் கல்யாணதிருக்காக
காத்துக் கிடந்தேன், சுமார் ஐந்து வருடங்கள்.
என்னை பார்த்த பல பெண்கள்
நிராகரித்தனர், இவள் உட்பட.
அப்போது கதவு திறந்த
என்னவள் என்னருகே வந்தாள்.
பொன்னிறம், எடுப்பான தோற்றம்,
உயிரை உலுக்கும் உயரம்,
தங்கக் குட இடுப்பு,
சுண்டி இழுக்கும் கூந்தல்,
மெழுகுச்சிலை மேனி
கொண்ட இவளை சொந்தங்கொண்டாடி
சூரையாடுவேன் என்று
சொப்பனத்திலும் நினைத்ததில்லை.
பால் சொம்பை பற்றி
பத்தினியை படுக்கையில்
அமரச் செய்தேன்.
அவள் பிஞ்சு விரல்களால்
என் உள்ளங்கையை வருடிப் பார்த்தேன்.
கொஞ்சம் சிலிர்த்துப் போனேன்.
சிறுது நேரம் உரையாடி,
குண்டு பல்பை அனைத்து,
என்னவளை கிடத்தி,
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
நிலா காய்ந்தேன்.
சுவையுள்ள கனிகள் இருந்தும்,
சுவைக்க மனம் இல்லாமல்.
சுவையற்ற கனியை சுவைக்க
துடிக்கிறது என் மனம்.
கொலுசுகள் சிரிக்க,
கட்டில் கால்கள் கைதட்ட,
அரங்கேறியது எங்கள் மெத்தை நாடகம்.
அவள் காதோடு
ஏதோ சொல்ல நினைத்து
இதழ் பதித்தால்,
சுரீர் என்று கம்மல்
என் உதடை பதம் பார்த்தது.
இதழாலே கம்மல்
கலையப் பார்த்தேன்,
ஏதோ கையில்லாதவன் போல்.
அப்போது என் மூச்சுக் காற்று
அவள் காதில் அனலாய் பாய,
கூச்சம் உச்சம் தொட்டு,
வாழை மீனாய் வளைந்து குலுங்கினாள்.
புருவத்தை வருடிப் பார்த்தேன்.
புண்ணியவதியின் முகம்
வெட்கத்தில் இன்னும் பூரிப்பானது.
இருக்க மூடி இருந்த
விழிகளை திறக்கச் சொன்னால்.
மறுதலித்தாள்.
போராடி போராடி தோற்றதால்,
இதழை குறிவைத்தேன்.
தேனில் ஊறிய பிலாச்சுலையாய்
மின்னியது.
இதழின் மினுமினுப்பு
கண்களை கூசியதால்,
என் இதழ் கொண்டு அணைத்தேன்.
இதை எதிர்பார்க்காத அவள்,
பரிதவிப்பில் கண்கள் திறந்தாள்.
உற்றுப் பார்த்த நான்,
சற்று சூடானேன்.
இந்தக் கண்கள் தானே
என் அழகை மூன்று முறை
தவறாகவே இவளிடம் பறை சாற்றியது?
பிடுங்கி விடுகிறேன் அந்த
விழிகளை என்று,
விரல்கள் கொண்டு, நோண்டி
எடுத்து, நசுக்கினேன்.
உன்னை பிடிக்கவில்லை,
என்று சொன்ன அந்த நாக்கை,
இழுத்து பிடித்து, என் பற்களால்
கடித்து துண்டித்தேன்.
பார்கவே வெகு கோரமாக
இருந்தாள்.
கொஞ்சம் சந்தோசப் பட்டேன்.
திடிரென்று யாரோ உள்ளே
வர, திரும்பி பார்த்தால்
என் புது மனைவி.
ஏன் இரு ஆரஞ்சுகளும்,
வாழைபழத் தோலும்
இப்படி சிதறிக் கிடக்கிறது என்றாள்.
ஏதோ பதட்டத்தில்
செய்திருப்பேன் என்று சமாளித்தேன்.
அருகில் வந்தவள்,
நாம் இருவரும் முதலில் நன்கு
பேசிப் பழகுவோம் என்று
சொல்லி, படுகையில் படுத்தாள்.
விளக்கையும் அணைத்தாள்.
இருவரும் சேர்ந்து படுத்தோம்.
லேசாக அவள் தோலில்
கை வைத்தேன்.
"முதலில் நன்கு பேசிப்
பழகுவோம் என்று சொன்னேனே,
புரியாது உங்களுக்கு?"
என்று கூக்குரலில் அதட்டினாள்.
நான் அதிர்ந்து, அடங்கிப் போனேன்.
அன்று ஆரம்பித்த அவளின் அதட்டல்,
இருபது வருடமாகியும்
இன்றும் தொடர்கிறது....!
திரிந்து கொண்டிருந்த எனக்கு
அன்று தான் முதல் இரவு.
மந்தமான வெளிச்சம்.
அறையெங்கும் மஞ்சள் நிறமே
பரவிக்கிடந்தது.
அலங்கரிக்கப்பட்ட பழைய
கட்டில்.
பழுப்பு நிற பஞ்சு மெத்தை.
பூ போட்ட தலையணை.
கட்டில் சுற்றிலும்
மல்லிகை பூச்சரங்கள்
தோரணங்களாய்.
மெத்தைமேல் கவனமாக
சிதறி இருந்த மலராத
மல்லிகை மொட்டுகள்.
தட்டு நிறைய லட்டுகளும்,
பல மாதிரியான பழங்களும்,
பக்குவமாய் பரப்பி
இருந்தது.
சந்தன ஊதுபத்தியும்
சித்தத்தை சிலுப்பியது.
கசங்கிய வெண் பட்டு சட்டை,
கரை படிந்த வேஷ்டியோடு
நாற்காலியில் நாசூக்காய்
அமர்திருந்தேன்.
சிரித்த முகம்,
சிறுத்த உருவம்,
மாநிறமாய் இருக்கும்
மார்கண்டேயன் நான்.
இருந்தும் கல்யாணதிருக்காக
காத்துக் கிடந்தேன், சுமார் ஐந்து வருடங்கள்.
என்னை பார்த்த பல பெண்கள்
நிராகரித்தனர், இவள் உட்பட.
அப்போது கதவு திறந்த
என்னவள் என்னருகே வந்தாள்.
பொன்னிறம், எடுப்பான தோற்றம்,
உயிரை உலுக்கும் உயரம்,
தங்கக் குட இடுப்பு,
சுண்டி இழுக்கும் கூந்தல்,
மெழுகுச்சிலை மேனி
கொண்ட இவளை சொந்தங்கொண்டாடி
சூரையாடுவேன் என்று
சொப்பனத்திலும் நினைத்ததில்லை.
பால் சொம்பை பற்றி
பத்தினியை படுக்கையில்
அமரச் செய்தேன்.
அவள் பிஞ்சு விரல்களால்
என் உள்ளங்கையை வருடிப் பார்த்தேன்.
கொஞ்சம் சிலிர்த்துப் போனேன்.
சிறுது நேரம் உரையாடி,
குண்டு பல்பை அனைத்து,
என்னவளை கிடத்தி,
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
நிலா காய்ந்தேன்.
சுவையுள்ள கனிகள் இருந்தும்,
சுவைக்க மனம் இல்லாமல்.
சுவையற்ற கனியை சுவைக்க
துடிக்கிறது என் மனம்.
கொலுசுகள் சிரிக்க,
கட்டில் கால்கள் கைதட்ட,
அரங்கேறியது எங்கள் மெத்தை நாடகம்.
அவள் காதோடு
ஏதோ சொல்ல நினைத்து
இதழ் பதித்தால்,
சுரீர் என்று கம்மல்
என் உதடை பதம் பார்த்தது.
இதழாலே கம்மல்
கலையப் பார்த்தேன்,
ஏதோ கையில்லாதவன் போல்.
அப்போது என் மூச்சுக் காற்று
அவள் காதில் அனலாய் பாய,
கூச்சம் உச்சம் தொட்டு,
வாழை மீனாய் வளைந்து குலுங்கினாள்.
புருவத்தை வருடிப் பார்த்தேன்.
புண்ணியவதியின் முகம்
வெட்கத்தில் இன்னும் பூரிப்பானது.
இருக்க மூடி இருந்த
விழிகளை திறக்கச் சொன்னால்.
மறுதலித்தாள்.
போராடி போராடி தோற்றதால்,
இதழை குறிவைத்தேன்.
தேனில் ஊறிய பிலாச்சுலையாய்
மின்னியது.
இதழின் மினுமினுப்பு
கண்களை கூசியதால்,
என் இதழ் கொண்டு அணைத்தேன்.
இதை எதிர்பார்க்காத அவள்,
பரிதவிப்பில் கண்கள் திறந்தாள்.
உற்றுப் பார்த்த நான்,
சற்று சூடானேன்.
இந்தக் கண்கள் தானே
என் அழகை மூன்று முறை
தவறாகவே இவளிடம் பறை சாற்றியது?
பிடுங்கி விடுகிறேன் அந்த
விழிகளை என்று,
விரல்கள் கொண்டு, நோண்டி
எடுத்து, நசுக்கினேன்.
உன்னை பிடிக்கவில்லை,
என்று சொன்ன அந்த நாக்கை,
இழுத்து பிடித்து, என் பற்களால்
கடித்து துண்டித்தேன்.
பார்கவே வெகு கோரமாக
இருந்தாள்.
கொஞ்சம் சந்தோசப் பட்டேன்.
திடிரென்று யாரோ உள்ளே
வர, திரும்பி பார்த்தால்
என் புது மனைவி.
ஏன் இரு ஆரஞ்சுகளும்,
வாழைபழத் தோலும்
இப்படி சிதறிக் கிடக்கிறது என்றாள்.
ஏதோ பதட்டத்தில்
செய்திருப்பேன் என்று சமாளித்தேன்.
அருகில் வந்தவள்,
நாம் இருவரும் முதலில் நன்கு
பேசிப் பழகுவோம் என்று
சொல்லி, படுகையில் படுத்தாள்.
விளக்கையும் அணைத்தாள்.
இருவரும் சேர்ந்து படுத்தோம்.
லேசாக அவள் தோலில்
கை வைத்தேன்.
"முதலில் நன்கு பேசிப்
பழகுவோம் என்று சொன்னேனே,
புரியாது உங்களுக்கு?"
என்று கூக்குரலில் அதட்டினாள்.
நான் அதிர்ந்து, அடங்கிப் போனேன்.
அன்று ஆரம்பித்த அவளின் அதட்டல்,
இருபது வருடமாகியும்
இன்றும் தொடர்கிறது....!

No comments:
Post a Comment