காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்!!
ஐய்யோ!
கண்கள் எறிகிறதே!
மூச்சு முட்டுகிறதே!!
இருட்டு.
இருட்டோ இருட்டு.
அங்கம் அடைபட்டுக் கிடக்கிறதே,
ரணமான ரணம்.
ஏதோ அதளபாதாளத்தில்,
புதையுண்டு கிடக்கிறேனோ?
வலியால் அலறி அலறி,
துடிக்கிறேன்.
கண்ணீர் கூட கசிய மறுக்கிறது.
விதியை நினைத்து,
விம்ம ஆரம்பித்து,
எங்கே இருக்கிறேனென்று,
யூகித்து யூகித்து,
புரிந்து கொண்டேன்.
ஆம்,
நான் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கிறேன்.
இந்த கொடூர நரகத்திலிருந்து விடுபட,
இறைவனை வேண்டினேன்.
கடவுளே எனக்கு
மட்டும் ஏன்?
சோதனை சோதனை,
மேலும் மேலும் சோதனை.
என்னால் உலகத்தை பார்க்கமுடியாதா?
உலகோடு உறவாட முடியாதா?
நான் படும் பாட்டை,
போக்கமாடாயா?
கதறி, கதறி பிராதித்தும்,
பதில் கிடைக்கவில்லை.
வெறுத்துப்போய்,
கண்கள் மூடி,
கிடந்தேன்
நாட்கள் கழிந்தன,
நிலைப்பாடு மாறவில்லை.
ஒரு நாள்,
ஒரு குரல் ஒலிக்கக் கேட்டேன்
அந்தக் குரல் சொன்னது,
கவலைப்படாதே!
இது முடிவல்ல.
இது உன் நிரந்தர நிலையன்று.
முதலில் உன்னை அறிந்துகொள்,
பிறகு உலகம் உன்னை,
ஆர்ப்பரிக்கும்.
என்று சொல்லி முடித்தது.
சிலமாதங்கள் கழித்து,
ஒரு நாள்,
அடை மழை,
என் மேனி முழுதும்,
மழை நீர் நனைத்தது,
மண்ணோடு நான்,
பிண்ணிப் பிணைந்தேன்,
ஏதோ ஒரு பூரிப்பு,
இனம் தெரியாத சந்தோசம்,
சொல்லமுடியாத மகிழ்ச்சி,
சற்றுத் திளைத்துப்போனேன்.
திடீரென்று, உடலில் ஒரு மாற்றம்,
அங்கம் சுற்றிலும்,
ஏதோ வளர்கிறது,
வளர்ந்துகொண்டே இருக்கிறது,
மேலும் கீழும், இடமும் வலமும்,
முளைத்து முளைத்து,
மண்ணைப் பிளந்துகொண்டு,
மேலே வரப்பெற்றேன்.
ஒரே வெளிச்சம்,
செங்கதிர்கள் தேகத்தை தாலாற்றிற்று,
நான் பூமியில் இருந்து,
வெளியே வந்துவிட்டேன்
சூரியன் தெரிகிறது,
வானம் தெரிகிறது,
செடி கொடிகள் தெரிகிறது,
தென்றல் தீண்டுகிறது,
சுவாசிக்க முடிகிறது,
பேரானந்தத்தில் இன்புற்று இருந்தேன்.
சில காலம் கழித்து,
ஒரு ஏக்கம்.
அருகில் உள்ள மரங்களும்,
செடிகளும்,
அழகாய் திடமாய் இருக்க,
நான் மட்டும் தளிராய் இருக்கிறேனே
என்ற வருத்தம்.
வேதனை கூடக் கூட.
கவலை காதடைத்தது.
அப்பொழுது,
உள்ளுக்குள் ஒலித்தது,
அதே குரல்.
கவலைப்படாதே!
இது முடிவல்ல,
இது உன் நிரந்தர நிலையன்று,
முதலில் உன்னை அறிந்துகொள்,
பிறகு உலகம் உன்னை,
ஆர்ப்பரிக்கும்.
என்று சொல்லி முடித்தது.
வேதனையை தவிர்த்து,
என்னை நானறிய,
கற்க்கலானேன்.
சில மாதங்களில்,
செடியானேன்.
வேர்கள் வலுப்பெற்று,
பூப் பூத்து,
காய் காய்த்தது.
இது வேறு மாதிரியான,
ஆனந்தம்.
எனை மறந்து,
கலியாட்டமாடி களைத்திருந்தேன்.
யாரோ என்னை அசைக்கிறார்கள்,
விழித்துப் பார்த்தால்,
ஒரு குட்டி யானை.
என் இழைகளை,
உண்டுகொண்டிருந்தது,
துதிக்கையால், என்னை
இறுக்கி இறுக்கி,
உயிரை உருவ நினைத்தது.
துடிக்கிறேன், அழுகிறேன்,
கண்ணீரில் கரைகிறேன்,
தேகம் முழுதும், துயரம் அப்பிக்கிடந்தது.
நல்ல வேலை,
யானை பசியடங்கி,
விலகிச் சென்றது.
காயத்தோடு,
சுற்றி முற்றிப் பார்த்தேன்,
மயான அமைதி,
காட்டு யானைகள்,
செடிகொடிகளை சிதைத்திருந்தது,
ஆனால் பெரும் மரங்கள்,
மட்டும் சேதாரமின்றி,
ஜீவித்திருந்தது.
ஆண்டவா!
ஏன் சோதனை மேல் சோதனை தருகிறாய்,
என் நிம்மதியை,
கொஞ்சம் நீட்ட மாட்டாயா?
என்னையும் அடர்ந்த மரமாய்,
உருமாற்ற மாட்டாயா?
என்று கெஞ்சினேன்.
திரும்பவும் என்னுள்,
அதே குரல்,
கவலைப்படாதே!
இது முடிவல்ல,
இது உன் நிரந்தர நிலையன்று,
முதலில் உன்னை அறிந்துகொள்,
பிறகு உலகம் உன்னை,
ஆர்ப்பரிக்கும்.
என்று சொல்லி முடித்தது.
உலகத்தை உற்றுப் பார்ப்பதை,
தவிர்த்து,
உள்நோக்கி பார்க்களானேன்.
அறிந்துகொண்டேன்,
பல அற்புதங்களை.
ஆண்டுகள் கழிந்தன,
புறம் என்னவாயிற்று என்று,
விழித்துப் பார்த்தால்,
ஆச்சிர்யம்!!
நான் அடர்ந்த மரமாய் மாறியுள்ளேன்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்,
பறந்து விரிந்து கிடக்கிறேன்.
பல நூறு பறவைகளின்,
வீடாய் இருக்கிறேன்.
பலரும் பசியாற,
பழங்கள் தருகிறேன்.
ஓய்வெடுக்க என் கிளையை,
விரித்து நிழல் தருகிறேன்.
இதை எண்ணி எண்ணி,
ஈடு இணையற்ற இன்பத்தில்,
இளைப்பாறினேன்.
இதற்க்கு மேல் என்னவேண்டும்
இவ்வையகத்தில்.
மறித்துப் போ! என்றாலும் கூட,
மறுக்க மாட்டேன்.
உடனே அடித்தது,
சூறாவளிக் காற்று.
அருகில் இருந்த செடி கொடிகள்,
சின்னாபின்னமாகின.
சிறு தளிர்களெல்லாம்,
செத்துப் போயின.
என் உடம்பும் உலுக்கி,
எடுத்தது
என் வாரிசு விதைகளெல்லாம்,
எனை விட்டு வெளியே தூக்கி,
எறியப்பட்டன.
ஆனாலும், நான் அங்ககீனமாகாமல்,
அங்கேயே இருந்தன
சில மணி நேரம் கழித்து,
காடெங்கிலும் மரண ஓலம்.
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்!!
ஐய்யோ!
கண்கள் எறிகிறதே!
மூச்சு முட்டுகிறதே!!
என்று வீசி எறியப்பட்ட,
விதைகள் அழுது,
புலம்பின.........
ஐய்யோ!
கண்கள் எறிகிறதே!
மூச்சு முட்டுகிறதே!!
இருட்டு.
இருட்டோ இருட்டு.
அங்கம் அடைபட்டுக் கிடக்கிறதே,
ரணமான ரணம்.
ஏதோ அதளபாதாளத்தில்,
புதையுண்டு கிடக்கிறேனோ?
வலியால் அலறி அலறி,
துடிக்கிறேன்.
கண்ணீர் கூட கசிய மறுக்கிறது.
விதியை நினைத்து,
விம்ம ஆரம்பித்து,
எங்கே இருக்கிறேனென்று,
யூகித்து யூகித்து,
புரிந்து கொண்டேன்.
ஆம்,
நான் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கிறேன்.
இந்த கொடூர நரகத்திலிருந்து விடுபட,
இறைவனை வேண்டினேன்.
கடவுளே எனக்கு
மட்டும் ஏன்?
சோதனை சோதனை,
மேலும் மேலும் சோதனை.
என்னால் உலகத்தை பார்க்கமுடியாதா?
உலகோடு உறவாட முடியாதா?
நான் படும் பாட்டை,
போக்கமாடாயா?
கதறி, கதறி பிராதித்தும்,
பதில் கிடைக்கவில்லை.
வெறுத்துப்போய்,
கண்கள் மூடி,
கிடந்தேன்
நாட்கள் கழிந்தன,
நிலைப்பாடு மாறவில்லை.
ஒரு நாள்,
ஒரு குரல் ஒலிக்கக் கேட்டேன்
அந்தக் குரல் சொன்னது,
கவலைப்படாதே!
இது முடிவல்ல.
இது உன் நிரந்தர நிலையன்று.
முதலில் உன்னை அறிந்துகொள்,
பிறகு உலகம் உன்னை,
ஆர்ப்பரிக்கும்.
என்று சொல்லி முடித்தது.
சிலமாதங்கள் கழித்து,
ஒரு நாள்,
அடை மழை,
என் மேனி முழுதும்,
மழை நீர் நனைத்தது,
மண்ணோடு நான்,
பிண்ணிப் பிணைந்தேன்,
ஏதோ ஒரு பூரிப்பு,
இனம் தெரியாத சந்தோசம்,
சொல்லமுடியாத மகிழ்ச்சி,
சற்றுத் திளைத்துப்போனேன்.
திடீரென்று, உடலில் ஒரு மாற்றம்,
அங்கம் சுற்றிலும்,
ஏதோ வளர்கிறது,
வளர்ந்துகொண்டே இருக்கிறது,
மேலும் கீழும், இடமும் வலமும்,
முளைத்து முளைத்து,
மண்ணைப் பிளந்துகொண்டு,
மேலே வரப்பெற்றேன்.
ஒரே வெளிச்சம்,
செங்கதிர்கள் தேகத்தை தாலாற்றிற்று,
நான் பூமியில் இருந்து,
வெளியே வந்துவிட்டேன்
சூரியன் தெரிகிறது,
வானம் தெரிகிறது,
செடி கொடிகள் தெரிகிறது,
தென்றல் தீண்டுகிறது,
சுவாசிக்க முடிகிறது,
பேரானந்தத்தில் இன்புற்று இருந்தேன்.
சில காலம் கழித்து,
ஒரு ஏக்கம்.
அருகில் உள்ள மரங்களும்,
செடிகளும்,
அழகாய் திடமாய் இருக்க,
நான் மட்டும் தளிராய் இருக்கிறேனே
என்ற வருத்தம்.
வேதனை கூடக் கூட.
கவலை காதடைத்தது.
அப்பொழுது,
உள்ளுக்குள் ஒலித்தது,
அதே குரல்.
கவலைப்படாதே!
இது முடிவல்ல,
இது உன் நிரந்தர நிலையன்று,
முதலில் உன்னை அறிந்துகொள்,
பிறகு உலகம் உன்னை,
ஆர்ப்பரிக்கும்.
என்று சொல்லி முடித்தது.
வேதனையை தவிர்த்து,
என்னை நானறிய,
கற்க்கலானேன்.
சில மாதங்களில்,
செடியானேன்.
வேர்கள் வலுப்பெற்று,
பூப் பூத்து,
காய் காய்த்தது.
இது வேறு மாதிரியான,
ஆனந்தம்.
எனை மறந்து,
கலியாட்டமாடி களைத்திருந்தேன்.
யாரோ என்னை அசைக்கிறார்கள்,
விழித்துப் பார்த்தால்,
ஒரு குட்டி யானை.
என் இழைகளை,
உண்டுகொண்டிருந்தது,
துதிக்கையால், என்னை
இறுக்கி இறுக்கி,
உயிரை உருவ நினைத்தது.
துடிக்கிறேன், அழுகிறேன்,
கண்ணீரில் கரைகிறேன்,
தேகம் முழுதும், துயரம் அப்பிக்கிடந்தது.
நல்ல வேலை,
யானை பசியடங்கி,
விலகிச் சென்றது.
காயத்தோடு,
சுற்றி முற்றிப் பார்த்தேன்,
மயான அமைதி,
காட்டு யானைகள்,
செடிகொடிகளை சிதைத்திருந்தது,
ஆனால் பெரும் மரங்கள்,
மட்டும் சேதாரமின்றி,
ஜீவித்திருந்தது.
ஆண்டவா!
ஏன் சோதனை மேல் சோதனை தருகிறாய்,
என் நிம்மதியை,
கொஞ்சம் நீட்ட மாட்டாயா?
என்னையும் அடர்ந்த மரமாய்,
உருமாற்ற மாட்டாயா?
என்று கெஞ்சினேன்.
திரும்பவும் என்னுள்,
அதே குரல்,
கவலைப்படாதே!
இது முடிவல்ல,
இது உன் நிரந்தர நிலையன்று,
முதலில் உன்னை அறிந்துகொள்,
பிறகு உலகம் உன்னை,
ஆர்ப்பரிக்கும்.
என்று சொல்லி முடித்தது.
உலகத்தை உற்றுப் பார்ப்பதை,
தவிர்த்து,
உள்நோக்கி பார்க்களானேன்.
அறிந்துகொண்டேன்,
பல அற்புதங்களை.
ஆண்டுகள் கழிந்தன,
புறம் என்னவாயிற்று என்று,
விழித்துப் பார்த்தால்,
ஆச்சிர்யம்!!
நான் அடர்ந்த மரமாய் மாறியுள்ளேன்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்,
பறந்து விரிந்து கிடக்கிறேன்.
பல நூறு பறவைகளின்,
வீடாய் இருக்கிறேன்.
பலரும் பசியாற,
பழங்கள் தருகிறேன்.
ஓய்வெடுக்க என் கிளையை,
விரித்து நிழல் தருகிறேன்.
இதை எண்ணி எண்ணி,
ஈடு இணையற்ற இன்பத்தில்,
இளைப்பாறினேன்.
இதற்க்கு மேல் என்னவேண்டும்
இவ்வையகத்தில்.
மறித்துப் போ! என்றாலும் கூட,
மறுக்க மாட்டேன்.
உடனே அடித்தது,
சூறாவளிக் காற்று.
அருகில் இருந்த செடி கொடிகள்,
சின்னாபின்னமாகின.
சிறு தளிர்களெல்லாம்,
செத்துப் போயின.
என் உடம்பும் உலுக்கி,
எடுத்தது
என் வாரிசு விதைகளெல்லாம்,
எனை விட்டு வெளியே தூக்கி,
எறியப்பட்டன.
ஆனாலும், நான் அங்ககீனமாகாமல்,
அங்கேயே இருந்தன
சில மணி நேரம் கழித்து,
காடெங்கிலும் மரண ஓலம்.
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்!!
ஐய்யோ!
கண்கள் எறிகிறதே!
மூச்சு முட்டுகிறதே!!
என்று வீசி எறியப்பட்ட,
விதைகள் அழுது,
புலம்பின.........
