Monday, 16 July 2012

தேவை ஒரு விவசாயப் புரட்சி..


விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பு,
பலமாகவும், வளமாகவும் இருந்த அந்த எலும்பு,
சற்று வலைய ஆரம்பித்தது,
வலுவிழந்து வலுவிழந்து மிகவும் வாடிக்கிடக்கிறது.

எத்தனையோ காரணங்கள் தெரிந்தும்,
சரி செய்ய மருத்துவன் அகப்படவில்லை.
இதை பலப்படுத்த ஒரு
அதி நவீன அறுவை சிகிச்சை உடனே தேவை.
ஏதோ எனக்கு தெரிந்த
சில அறுவை சிகிச்சை முறைகளை
முறையே பட்டியலிட்டிருக்கிறேன்,
பெரியவர்கள் பார்வைக்காக.

முதலாவதாக கூட்டு நிறுவன
விவசாய முறையை அறிமுகப்படுத்தலாம்.

பல பல தனியார் நிறுவனங்கள்,
தங்கள் பணத்தையும்,
தொழில் நுட்பத்தையும், விவசாயத்தில்
முதலீடு செய்தால்,
வறண்டு கிடக்கும் விவசாயம்
கொஞ்சம் துளிர் விடும்.

வரும் லாபத்தை நேரடியாக
விவசாயிகலோடே பங்கிட்டுக் கொள்ளலாம்.
இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபமும்,
அரசியல் செல்வாக்கும், அடியாட்கள் ஆதரவும்
கொண்டுள்ள இடைத்தரக அரகர்களை,
இல்லாமல் செய்யலாம்.

இது ஒட்டிய வயிறோடு
வாழும் உழவனின் வாழ்வை
நிச்சயம் மேம்படுத்தும்.

இரண்டாவதாக பதனிடும் முறையும்,
பகிர்மான முறையும் செவ்வனே
செப்பனிட வேண்டும்.

அறுவடை செய்த தானியங்களையும்,
காய் கனிகளையும்,
சேகரித்து வைக்கும் கிடங்குகளை,
உயர்தர அம்சங்கள் நிறைந்ததாய்
அமைக்க வேண்டும்.

கிடங்குகளில் இருந்து,
சில்லறை வியாபாரியிடம் கொண்டு
சேர்க்கும் வாகனங்கள்,
அதிநவீன குளிர் சாதன வசதியோடு
இருபது மிக மிக அவசியம்.

இதனால் யாருக்கும் பலனின்றி
அழுகிப்போகும் சதவீதத்தை,
வெகுவாகக் குறைக்கலாம்.
வெள்ளாமை செய்த
அனைத்தும் கெட்டுப்போகாமல்
விருப்பமானர் வசம் சென்று சேரும்.

சில்லறை  வியாபாரிகளும், வாடிக்கையாளர்களுக்கு
குறைந்த விலைக்கு விற்க உதவும்.
இதன்மூலம் பயன் பெறுபவர்கள்,
விவசாயிகள், வாடிகையளர்கள்
மற்றும் முதலீடு செய்த கூட்டு
நிறுவனங்கள்.

மூன்றாவதாக பயிர்களுக்கு
காப்பீட்டுத்  திட்டம்
அறிமுகப் படுத்தலாம்.

நிலம் வைத்துள்ள விவசாயிகள்,
70 சதவிகதமும்,
அரசாங்கம்மோ அல்லது கூட்டு நிறுவனமோ
30 சதவிகதமும் காப்பீட்டுத் தொகை கட்டலாம்.

இதனால் அதிக மழையால்
பயிர்கள் மூழ்கிப் போவதையும்,
அல்லது மழையின்றி
பயிர்கள் வாடி நாசமவதையும்
ஈடு செய்யலாம்.

மேலும் தினம் தினம்
தற்கொலை செய்து கொள்ளும்
விவசாயிகளையும்  காப்பாற்றலாம்.

நான்காவதாக விவசாயிகளுக்கு,
கற்றுத்   தேறிய விஞ்ஞானிகள்,
போதிய அறிவுரை வழங்கும் திட்டம் வேண்டும்.

விவசாயத் தொழில் மிக மிக
அபாயகரமானது.
அசந்தால் அடித்துவிடும்.
கொத்துக் கொத்தாக
குடும்பங்கள் தற்கொலை செய்து
கொள்ளும் அலங்கோலம் இந்த
தொழில் சார்ந்தவர்க்கு வெகுவாக சாத்தியம்.

ஆகையால் நிலங்களின் தன்மை,
மண்ணின் வீரியம்,
விதைகளின் விவரங்கள்,
உரங்களின் உன்னதம்,
பூச்சிகொல்லிகளின் விஷத் தன்மை
பற்றி விவசாயி நன்கு அறிந்து
விவசாயம் செய்தால்,
விவசாயப்பணி பிணி நீங்கி
நீடூழி வாழும்.

ஐந்தாவதாக நேர்த்தியான
நீர்பாசன முறையை அமுல்படுத்தலாம்.
அரசாங்கங்கள் போதிய
அணைக்கட்டுகள் கட்ட வேண்டும்.

இதனால் நீரையே நம்பி
செய்யும் தொழில்,
நெடு நாட்கள், சீக்கு பிடிக்காமல்,
சீரோடும், சிறப்போடும்,
சிறகடித்து பறக்கும்.

இந்த ஐந்து திட்டங்களும்
அமுல் படுத்தினால்,
விவசாயத் தொழில்
விருட்சம் பெரும் என்று
நான் நம்புகிறேன்.

ஏழு வருட இல்லறம்


இன்றோடு உன் கைத்தலம் பற்றி,
ஏழு வருடங்கள் ஆகிறது.
யோசித்துப் பார்த்தால்,
கொஞ்சம் மலைப்பாய் இருக்கிறது.

உன்னைப் பார்த்த அந்த
மாலைப்பொழுது, இன்னும்
மங்காமல் மனதிற்குள் மிண்ணிக்
கொண்டே இருக்கிறது.

அன்றைய தினம்,
மின்மினிப் பூச்சியால் செய்த
உடையை அணிந்து நின்றிருந்தது,
இன்னும் கண்ணுக்குள் கலங்காமல் நிற்கிறது.

உன் அடர்ந்த கூந்தல்
அன்றே என்னை கட்டிப்  போட்டது
உண்மை தான்.

அந்த வினாடியே முடிவு செய்தேன்,
நீ தான் என் பொன் வசந்தமென்று.
உறுதி செய்தேன்,
என் மூச்சுள்லவரை இவள் தான்
என் வாழ்வாதாரமென்று.

மறுசிந்தனை ஏதுமின்றி
காதல் வலையை காற்றில் வீசினேன்.
நீ மசியவில்லை, ஆனால் உன்
குடும்பம் இசைந்து கொடுத்தது.

கடவுளின் கடைப்பார்வையால்
என் உறவுகளும் உளமாற வாழ்த்தியது.

உலகறிய உன் கழுத்தில்
தாலி கட்டினேன்.

அன்று முதல் என் வாழ்கையை
உந்தன் கையில் ஒப்புவித்தேன்.
எதிர்காலம் பற்றிய
பயத்தை பறக்கவிட்டேன்.
நான் பன்மடங்கு உறுதிபெற்றதாய்
நம்பலானேன்.
பெண் குழந்தை பேறு
பெற தயாரானேன்.
தேகமெங்கும் புது ரத்த வெள்ளம்
பாய்வது கண்டு பரவசப்பட்டேன்.

முதல் வருடம், எல்லோரும் போல,
நாம் காதலில் உருகவுமில்லை,
சொக்கிப்போய் உரையவுமில்லை.
காதல் படகில் சாந்தமாய்
சவாரி செய்தோம்.
நம் பயணத்தில் எந்த ஒரு
நாளும் சலிப்பை சந்தித்தே இல்லை.
உலக அதிசியம் தான்.

இரண்டாம் வருடத்தில்
புது வீடு வாங்கச் சொல்லி,
செல்லமாக கட்டளையிட்டாய்.
நானும் வாங்கினேன். எப்படி
முடிந்தது என்பது அந்த
காதல் கடவுளுக்கே வெளிச்சம்.
நம் காதலும், பாசமும்
பன் மடங்கு பெறுகிற்று.
ஆனாலும் திகட்டவில்லை.

மூன்றாம் வருடத்தில் என்
வெளிநாட்டுப் பயணம்.
தனிமை என்னை கொல்லுகிறது
என்றேன், விளையாட்டாக.
கவலையை விடு,
இதோ வருகிறேன் என்று,
உயர்மட்ட வேலையே உதறியெறிந்து
ஓடி வந்தாய், என்னோடு இருக்க.
அப்படியே உறைந்துபோனேன்,
உன் அக்கறை கண்டு.
இவளுக்காக என்ன செய்யப்போகிறோம்
என்ற கேள்விக்கு, இன்று வரை
கண்ணீர் தவிர வேறு பதிலில்லை.

நான்காம் வருடம், நீ கற்பமானாய்.
சகுனங்கள் அனைத்தும்
ஆண் குழந்தைக்குரியதாய்,
புலம்பித்தள்ளினர் பெரியவர்கள்.
யாழினியே வந்து பிறப்பாள்
என்று, உறுதியாய் சொன்னோம்.
நம் இருவரின் ஒருசார்ந்த
சிந்தனை, சிலரை பொறாமையில்
பொங்க வைத்தது.
அப்போதும் நம் காதல்
படகு கரை ஒதுங்கவில்லை.

ஐந்தாம் வருடம்,
நான் வெளிநாட்டில்,
கற்பவதியான  நீ, உன் வீட்டில்.
மூன்றே மூன்று மாதங்கள்
தனித் தனியே வாசம் செய்தோம்.

நீயோ தூக்கம் மறந்து,
உணவே மருந்தாய்,
மருந்தே உணவாய் உண்டு வந்தாய்.
நான் உடைந்து போனேன்.
ஆசையாய் கொஞ்சும்
அன்னை இருந்தும்,
அன்போடு அரவணைக்கும்
அப்பன் இருந்தும்,
ஆரவாரப் படுத்த
தம்பி இருந்தும்,
ஏனோ உன் கண்கள்
என்னையே தேடிற்று.

தடைகள் பல கடந்து
யாழினியை பெற்றெடுத்தாய்.
உன் காதல் இனி யாழினிமேல்
பாயுமென்று பார்த்து,
சற்று  ஏமாந்துபோனேன்.

ஆறாம் வருடத்தில் ஆரோகியமான
காதல் இன்னும் ஆழமாய் சென்றது.

இந்த ஏழாம் வருடத்தில்
எத்தனையோ சிக்கல்கள்.
சற்றும் சிந்தை கலங்காமல்,
நீயே சமாளித்தாய்.
சதா என்னையே
சுத்தி சுத்தி வந்தாய்.
சிக்கலுக்கு காரணம் நான்
என்று தெரிந்தும்,
சிகரத்தில் வைத்து கொஞ்சினாய்.
இப்படியும் காதலிக்கலாம்
என்று காதல் பித்தனுக்கே
கற்றுக் கொடுத்தாய்.
நம் காதல் இன்னும்
கொஞ்சம் மெருகேறியது.

இப்படியே இன்னும்
எழுபது வருடங்கள் சேர்ந்தே
இருக்கவேண்டும்,
பல காதல் பாடங்கள்
கற்றுத் தேறி,
எதிர்வரும் தடைகளை
உடைத் தெரியவேண்டும்.

சம்மதமா?

உனக்காக உருமாறினேன்....


எங்கோ பிறந்தாய்,
எங்கோ வளரந்தாய்,
என் கண்ணில் பட்டாய்,
காதலியானாய்.
என் கரம் பற்றி,
மனைவியுமானாய்.

கல்யாணம் ஆகியும்,
கண்ணில் நீ காதலியாகவே
தெரிந்தாய்.

காலம் செல்ல செல்ல,
நீ கேள்வியாளர் ஆனாய்,
நான் பதில் சொல்லும்
மாணவனானேன்.

எதுவானாலும் ஒரு
ஏன்? எதற்கு? எப்படி?
என் காதில் கேட்கும்.
அன்று தான் என் காதலியிடம்,
என் மனைவியின் முகம் எட்டிப்பார்த்தது.

இவ்வண்ணம் வாழ்க்கை
ஓடிக்கொண்டிருக்க.

ஒரு சில மாதங்கள்
நானும் இவளும் தனித் தனியே
வாசம் செய்ய நேர்ந்தது.


எனக்கு சந்தோசமோ, சந்தோசம்.
இனி குறைவின்றி கூத்தடிக்கலாம்,
நேரம் காலம் இல்லாமல் வெளியே
சுத்தலாம்.
கேள்வி கேட்ட்க யாருமே
இல்லை என்று அந்த நாளை
ஆரம்பித்தேன்.

நிம்மதியாக ஊர் சுத்திவிட்டு,
உணவருந்தி, கண்ணயர்ந்தேன்.
அதிகாலை பசிதாங்க முடியாமல்
புரண்டேளுந்தேன்.
இரவில் அளவு தெரியாமல்
உணவருந்தியுள்ளேன் போல.
வயிறு உணவு தேடினாலும்,
மனசு ஏனோ உன்னை தேடியது.
அன்று புரிய ஆரம்பித்தது,
மனைவியின் மகிமை.

இன்னும் ஒரு படி மேலே சென்று,
என் தேவையறிந்து, உருமாற தயாரானாய்.
தயக்கம் ஏதுமின்றி,
தன்னிச்சையாய் உருமாறினாய்.
அதை பார்த்த நான் சிலையானேன்.

ஒரு சமயம், எனக்கு
தாயின் மடி தேடியது.
பிடி என் மடியென்று,
பிடரி தொட்டு, தலை கோதினாய்.
பலாயிரம் மயில் தொலைவில்
வசிக்கும் என் அன்னையை,
அன்று ஸ்கைப் துணையின்றி
அருகில் பார்த்தேன், பூரித்துப் போனேன்.

இதேபோல் தந்தையின் வழிகாட்டலுக்கு
தவித்ததை உணர்ந்த நீ,
சிறிதும் தயவு தாட்சண்யம்
பாராமல், தடி எடுத்து,
என் தந்தை போல் வழிகாட்டினாய்.
நான் வாயடைத்துப் போனேன்.

நாடுகடந்து வந்த எனக்கு,
அன்று நண்பர் இல்லையா..
நீ நண்பர் வேடமிட்டு,
நடுஇரவு என்றும் பாராமல்,
காலை வாரிக்கொண்டே இருப்பாய்.
சிரித்து சிரித்து வாய் வலி எடுக்கும்.

காரம் ஆகாதென்றேன்.
இனிமேல் நீ காரம் கேட்கக்
கூடாது என்று உன் நாக்கிடம்
கட்டளையிட்டாய்.

நான் வேலை முடித்து
வீட்டுக்கு வரும் போது
நீ வேண்டுமென்றேன்.
கவலையை விடு என்று,
தன் கனவு வேலையை
காகத்திருக்கு போட்டுவிட்டு
கட்டியணைதாய்.

பெண் பிள்ளைதான் வேண்டுமென்றேன்.
ஆமாம், ஆமாம், சரி தான்,
ஆண் பிள்ளைகளே இம்சை தான்
என்றாய்.
ஏதோ ஆறேழு குழந்தைகள்
பெற்றேடுத்தார் போல்.


இப்படி எனக்காக உருமாறி,
உருமாறி, உன் அடையாளத்தையே
தொலைத்துவிட்டாய்.
அனைத்தையும் தொலைத்துவிட்டு,
என் அன்புக்காகவே ஏங்கி
நிற்கும் உனக்கு,
இன்று பிறந்தநாள்.

எதைப் பரிசாக கொடுப்பதென்று தெரியாமல், 
நானும் உன்னைப்போல் உருமாறுகிறேன்.
இன்று முதல், என் இறுதி மூச்சுள்ளவரை, 
நானே உந்தன் இதயத் துடிப்பாய் இருப்பேன். 

உன்னை சீரும் சிறப்போடும் வாழ வைக்க, 
ஒவ்வொரு நொடியும் துடித்துக் கொண்டே 
இருப்பேன்.....

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!