இரண்டொரு தினம் முன்பு
அடிமேல் அடி வைத்தாள்,
அன்னை துணையின்றி.
எனக்கோ இந்த அண்டமே,
அரை நொடி அற்றுப்போனதாய் உணர்ந்தேன்!
பூப்பந்து பாதங்கள் திடத்தரையில் பதிந்தபோது,
தரை கூட நெளியக் கண்டேன்!
தத்திதத்தி வந்தபோது,
யானையின் துதிக்கையில் என்னை
தூக்கியதாய் உரைந்தேன்!
கண்களை சுருக்கி,
உதடுகளை விலக்கி சற்று நின்ற போதுதான்,
நான் இன்னும் இந்த பிரபஞ்சத்தின்
பிரஜைதான் என்று புரிந்தேன்!
ஆம் எந்த மழலையின் முதல்
நடையும் பெற்றோரை,
மதிகலங்க வைப்பது இன்பதிர்ச்சி தான்!!!
Subscribe to:
Post Comments (Atom)

can feel the experience... nice words and a brilliant poem!!
ReplyDeleteGanesh, I have read this already.. Again, read it today also. Can be read n no. of times.. Superb..
ReplyDelete