Friday, 4 April 2014

முட்டாள்கள் தினம்

மார்ச் 31, இரவு 7:30

மூன்று நண்பர்களோடு,
முக்கோண வடிவில்,
முட்டிக்கொண்டு அமர்ந்து.

சினிமா படம் கொண்ட,
தினத்தந்தி தாழை,
நடுவில் விரித்து வைத்து.

அதிலொரு விஸ்க்கி பாட்டிலை,
வீரமாய் நட்டுவைத்து,
ஆறு சிகரெட் பாக்கெட்டை
அம்சமாய் அடுக்கி வைத்து.

நடுசாம கூத்துக்கு,
தயாரானோம்.

விடிந்தால் என் பிறந்தநாள்,
அதை கொண்டாடி மகிழவே,
இந்த ஏற்பாடு.

எப்பொழுதுமே ஒரே மாதிரி
குடித்து, குடித்து வெறுத்துப்போய்
இருந்தது.

இந்தமுறை புதுவிதமாக,
சிங்கப்பூரில் இருந்து கிடைத்த,
ஒரு போதை வில்லையை,
போட்டுக் குடிக்க முடிவு
செய்தோம்.

இதன் மூலம்,
அதிக போதை,
குறைந்த தலைவலி என்று
பெரும் குடியர்கள் சொல்லி
கேட்டிருக்கிறோம்.

பாசக்கார நண்பர்கள்,
எனக்கும் மட்டும் அதிக
ரௌண்டுகள் தருவதாய்
சொன்னது, என்னை சொர்கத்துக்கு
கூட்டிச் சென்றது.

ஆட்டத்தை ஆரம்பிக்க,
அனைவரும் ஆயித்தமானோம்.

பாட்டில் அடிதட்டி,
முடிதட்டி, மூடி பிடித்து,
கழுத்தை திறுக்கி,
ஒரு போதை வில்லையை,
உள்ளே வீசி எரிந்து,
கதறக் கதற,
கண்ணாடி டம்ப்ளரில்
ஊற்றினான் ரவி.

அனைவரின் முகத்திலும்,
ஆயிரம் வாட்ஸ் குண்டு பல்பு,
கூதூகளித்தது.

சோடா கலந்தார்கள்,
அடுத்தவனின் அளவை அளவிட்டனர்,
கண்களை சுருக்கி,
வாயை குறுக்கி,
முகத்தை இறுக்கி,
சரக்கை அடித்தார்கள்.

பிறகு சைடு டிஸ்சை,
கடித்தார்கள்.
இதேபோல் சில
முறை என் நண்பர்களும்,
பல முறைகள் நானும்,
அடித்து, முடித்து களைத்தோம்.

ஒவ்வொருவரும் தங்கள் சீட்டை,
தேட்ச்சபடி பின்னே சென்று,
சுவரில் ஒட்டிகொண்டனர்.

நானோ ஒரு மர அலமாரியை,
முதுகில் முட்டுக் குடுத்து,
அமர்தேன்.

ஏதோ ஒரு மாற்றும்,
அடிவயிரில் ஏற்பட்டு,
என்னை எழுப்பி விட,
திமுறி எழுந்தேன்.

நின்றேன்,
கண்கள் இருட்டிற்று,
வாய் தானாகவே திறந்தது,
தலை தொங்கிற்று,
கூன்போட்டு குனிந்தேன்,
குபீரென்று ஏதோ கொட்டிற்று.

ஏப்ரல் 1, அதிகாலை 4:30

அமைதி,
மயான அமைதி.

கும் இருட்டு,
கெட்ட வாடை வீசியது,
கைகளில் ஏதோ பச பசவென ஓட்டலானது.

தலை,  இரண்டு துண்டானது போல்
ஒரு வலி. தாங்கமுடியாமல்
துடிக்கிறேன்.

தீடீரென்று,
காது கிழியும் அளவில்,
ஆம்புலன்ஸ் சத்தம்.

பட படவென்று எழுந்து,
நிற்க முடியாமல்,
வழுக்கி, வழுக்கி,
நிற்கிறேன்.

பதறியடித்து,
லைட்டை ஆன் செய்தேன்.

அய்யோ, அய்யய்யோ,
ரூமில் நான் படுதிறந்த,
இடத்தில் மட்டும்,
ரத்தமான ரத்தம்.

தலையில் இருந்து,
ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.
உடை முழுதும்,
ரத்த அபிசேகம்.

நான் படுத்திருந்த தலைமாட்டில்,
ஒரு பெரிய காசப்புகடை கத்தி.

கத்தியின் கைபிடியை அலமாரியின்,
இடுக்கில் சிக்கியபடி,
அறுபடும் பகுதி, அண்ணாந்து பார்த்தபடி,
சொருகி இருந்தது.

இன்னொரு கத்தி,
மின்விசிறியில் தூண்டில் மீனாய்,
தொங்கிக் கொண்டிருந்தது.

இரு கத்தியிலும்,
ரத்தம் சொட்டியபடி இருந்தது.

என்ன நடந்தது என்று,
யூகிக்க முடியவில்லை.
உடல் முழுதும் வலியோ வலி.

சற்று உற்றுப் பார்த்தால்,
ஏதோ மூளை போன்ற ஒன்று,
சிதறிக் கிடந்தது.

ஆங்காங்கே சிறு சிறு,
சதைத் துகல்கள் படர்ந்து
கிடந்ததைக் கண்டு
அலற ஆரம்பித்தேன்.

தலையோ நிற்க தடுமாறி,
சரிந்து கொண்டே இருந்தது.

கண்களால் எதுவும் காண
முடியாமல், காப்பாற்ற சொல்லி, 
கெஞ்சி கதறுகிறேன்.

எதுவும் நடக்காததால்,
மௌனமாகி யோசிக்கிறேன்.

யோசித்ததில் புரிந்தது.

ஆம் நான் நேற்று இரவு,
கொலை செய்யப்பட்டுள்ளேன்.

இரவே இறந்துள்ள நான்,
இப்போது ஆவியாக உலவுவதும்
புரிந்தது.

கண்ணீர் பெருக்கெடுத்து,
ஓடுகிறது.
கண்ணீர் கைகளில் பட்டு, பட்டு,
சுயநினைவு திரும்ப,
திரும்பவும் யோசித்தேன்.

ஆவியான என்னால் பார்க்கமுடிகிறது.
தொட முடியுமா?

தொட முடிந்தால்,
நான் ஆவியன்று.

ஆக யாரையேனும்
தொட்டுப் பார்த்து
முடிவு செய்வோம் என்று முடிவெடுத்தேன்.

மெதுவாக நகர்ந்து, நகர்ந்து,
ஓராமாய் இறந்தோ,
அல்லது போதையில் கிடக்கும்,
நண்பரை தொடச் சென்றேன்.

ரவியை,
தொட்டேன், தொட முடிந்தது.

குலுக்கி குலுக்கி பார்த்தேன்,
சடாரென்று இருவரும் எழுந்து,
ஏப்ரல் பூல் என்று கத்த,
நான் பயந்தெலுந்து,
பதறியடித்து,
பின்னோக்கி ஓடி,
ரத்தக் கலர் பெயிண்டில்,
கால் வழுக்கி,
சொருகி இருந்த,
கசாப்பு கடை கத்தியில்,
தொபுக்கடீரென்று தலை பதித்தேன்.

பிலாப்பழம் நடுவாக்கில்
அறுபடுவதுபோல் தலை அறுபட்டு,
மூளை பிளாச் சொலை போல்
பிதுங்கி விழுந்தது.

அடுத்த வினாடியே,
ஆருயிர் நண்பர்கள் அலறி
என் உடல் அருகில் வர,
நானோ நிஜமான ஆவியாகி,
நண்பர்களுக்கு,
ஏப்ரல் பூல் சொல்லிகொண்டே,
ஆகாயத்தில் ஆஸ்தமித்தேன் !!!!

No comments:

Post a Comment