என் வயது 33, திருமணமாகி
குழந்தைக்காக தவமிருக்கும் தம்பதி.
வேலை நிமித்தம் வெளியூரில் குடிகொண்டுள்ளோம்.
அன்று மதியம் வேலையேதுமின்றி
வீட்டில் அமர்ந்து ஒன்றுக்கும்
பேராத தொலைக்காட்சி சீரியலை
சீரிசாக பார்த்து கொண்டிருந்தேன்.
தீடிரென்று எழமுயன்று, முடியாமல்போனது.
கைகள் வைத்து எழமுன்றேன், அதே கதிதான்.
கைகளை பார்க்க மட்டுமே முடிகிறது.
அசைக்க முடியவில்லை.
ஐய்யோ என்று அலற,
மனைவி பதரி வந்து வினவினாள்.
ஒன்றுமே புரியாமல், ஆஸ்பித்திரியில் தஞ்சமடைந்தோம்.
புகைப்பழக்கத்தால் விழுந்துவிட்டது கைகளும்,
கால்களுமென்றார் மருத்துவன்.
இடியொன்று இடித்து சென்றது எங்களை.
உடனே குணப்படுத்த முடியாதென்று,
உறுதியாக உரைத்தார்.
ஒரு மாதம் தங்கி பார்த்து, மாத்திரையோடும்,
பண ரசீதோடும் வீடு வந்தடைந்தோம்.
மாமனார் ஒரு சக்கிர வண்டியொன்று வாங்கி தந்தார்.
ஓரிரு தினங்கள் கழித்து, எங்கள் வீட்டில்
நாங்கள் இருவர் மட்டுமே.
அதில் நான் மட்டும் பேசும் பொம்மையாய்.
பலநாள் பற்பசை பார்க்காத பற்களை துலக்க
ஆசை பட்டதால், மனைவி வந்து விழக்க,
அருகில் துப்ப ஒரு பாத்திரம்,
தண்ணீர் வாயில் இட மறுபாத்திரம்,
பார்க்கவே ஆத்திரமாய் வந்தது.
காலை உணவும், காலை கடனும்,
மனைவியின் மனசால் சாத்தியபடுகிறது.
மதிய உணவு, ஸ்ட்ரா இட்ட ஜூஸ்.
இரவு உணவும் இனியவளின் தயவால்.
எப்படி எல்லாம் பொறுப்பின்றி
வாழ்ந்திருக்கிறேன், விருப்பமின்றி
யோசித்தேன்.
நேரமரியாத தூக்கம், பசியாற்றாத உணவு.
எத்தனை சிகரட்டுகள் ஒரு நாளைக்கு?
காலை எழுந்தவுடன் ஒன்று,
காபியருந்தும்போது ஒன்று,
அலுவலகம் அடையும்போதொன்று,
அருகில் அமர்பவனின் அன்புக்காக ஒன்று,
அலுவலக அல்லல் தீர பல,
மற்றவர் புராணம் பாட சில,
மதிய உணவு செல்லும்போதொன்று,
செரிப்பதர்க்காக ஒன்று,
மாலை காபிக்கும் ஒன்று.
இதே போல் இரவுக்கும்,
படுக்கும் போது கலையாத
தூக்கம் வர ஒன்று,
களைந்து விட்டாலோ துரத்தி
பிடிக்க மற்றொன்று.
இவையனைத்தையும் கணக்கிட்டால்
இருபதை தாண்டும்.
இதில் என்றாவது ஒரு நாள் மது
அருந்தினால், சில பாக்கெட்டுகள்
செலவாகும்.
சில நேரம், நேரம் போகவில்லை
என்று அடித்திருக்கிறேன்.
பல நேரம், நேரம் போவதே
தெரியவில்லை என்று இழுத்திருக்கிறேன்.
உணவுக்கு பதில் சுவைத்திருக்கிறேன்,
உறக்கத்திற்கு பதில் பிடித்திருக்கிறேன்.
இன்றோ ஒன்னுக்கு கூட
ஒழுங்காக போக முடியவில்லை.
இந்த நொடி காலை உணவு,
சாப்பிட்டது செரிக்க, எழுந்து ஓட,
மனது துடியாய் துடிக்கிறது,
ஆனால் உடல் தசைகள் செத்துகிடகிறது.
முயன்று முயன்று உடலை அசைக்க
பார்த்து ஒன்னுகே வந்துவிட்டது.
விளைவு, சக்கிர வண்டி சகதியாகிவிட்டது.
மனைவி துணையோடு, மாற்று
இருக்கைக்கு மாறினேன்.
பின்பு மனனவியோ காய்கறி வாங்க
சென்றுவிட்டாள். நான் தனியே வீட்டில்.
தனிமையாக இருந்ததால்,
துக்கம் தொண்டையடைத்தது,
தாரை தாரையாக, கண்ணீர் பெருகி,
முகம் நனைந்து, சட்டையும் ஈரமாயிற்று.
உப்பு படர்ந்த முகத்தை தேடி,
மூன்று ஈக்கள் வந்தது.
ஈக்கள் சத்தமே, என் சித்தத்தை கலக்கியது.
மூன்றும் மூன்று இடம் பார்த்து
முகத்தில் அமர்ந்தது,
முகத்தை இடப்பக்கமும், வலப்பக்கமும்,
மாறி, மாறி ஆட்டினேன், ஈக்கள் எழுந்தபாடில்லை.
வேகமாக ஆட்டுகிறேன், எழுந்து பின்பு,
அதே இடத்தில் அமர்ந்தது, அந்த அகோர ஈக்கள்.
முன்னும் பின்னுமாக அசைத்தேன், அசரவே இல்லை.
இப்போது அறிப்பெடுகிறது, முகமுழுதும் அரிப்போ
அரிப்பு, ஆ! ஆஅ! என்று கத்துகிறேன்,
அரிப்பு இன்னும் கூடுகிறது.
சொரிய நினைத்து, சரிந்து விழுகிறேன்,
ஈக்கள் விட்ட பாடில்லை.
ஐய்யோ! ஐயோ!
காப்பாத்துங்க!!!! காப்பாத்துங்க!!!!!!!
என்று கூச்சளிடுகிறேன்.
என்னங்க? என்னாச்சுங்க?
என்று படுக்கையில் இருந்த
என் மனைவி கேட்டாள்.
ஆனந்த கண்ணீரில்,
கேடு கெட்ட பழக்கத்தை கழுவி,
விட்ட தூக்கத்தை தொடர்ந்தேன்................................
Subscribe to:
Post Comments (Atom)

A Good Message to all the chain smokers... its true that many smoke for the pleasure and regret only when go numb and of no use to their beloved one... i wish everyone should read this... i must really salute to your thoughts
ReplyDeleteJust a small clarification as i cant read between lines if it is in tamil... your end is stating that he is dream and imagining that he can get paralysed if he smokes continuously... is my understanding correct????
Regards
Janani
Thanks Janani. Yes your understanding is correct.
ReplyDeleteHi Ganesh, Perfect one to whom don't care about effects of smoking..!!
ReplyDeleteWhen we wake out of a horrible dream and realise it’s just a dream and not true the relief which we happen to get may make our life good, better or life changing... As an author you have played with one such character... Mobility illness is the most disgusting illness and you have portrayed how this can make us helpless even to get ride of a small bee... A good thought provoking message for people with any kind of bad habits who are unaware of the limits...
ReplyDeleteFantastic narration.. I remembered my father when I am reading the story, he is no more now. He passed away in his age of 40 because of heart attack. One of the main reason for his heart attack was his smoking.
ReplyDeleteWhen people start smoking they used to say all the above reasons for their smoke but once they used to it then it will became their one of the day to day habit. In my childhood I used to ask my father why your smoking but he never gave me a valuable reason. He addicted for smoking but smoker will say ‘I am smoking for relax ‘ .
Best scene in the story is the bee part you used to explain what he can’t do when he moved into Mobility illness because of smoking. Your thought is an alarm for the people who started smoking.
I am really touched....
Awesome title.. 'Quit Smoking' ku ippadi kooda Tamizhakkam kodukalaam pola .... Good message.. I wish it helps the intended audience.
ReplyDelete