Saturday, 11 September 2010

அப்பா எங்கே? (சிறுகதை)

மும்பையில் உள்ள வாஷி (நவி மும்பையின் முதல் பிரிமியர் சிட்டி), அங்கு ஒரு அறுபது மாடி அடுக்கு குடியிருப்பில், நாற்பத்து மூன்று 'டி'  பிளாட் இல், குடியிருக்கிறாள் லோகநாயகி, கணவன் சுகுமார் மற்றும் நான்கு வயது மகள் நிவி.

அன்று காலை 10 : 30 மணிக்கு ரீங்காரமிட்டது கதவின் அழைப்பு மணி. மகள் பள்ளி சென்றுவிட்டாள் சுகுவோடு.

சுகுவும் அலுவலகம் அடைந்துவிட்டதாய் அறிவித்துவிட்டான் எப்போதும்  போல். யாராக இருக்கும் என்ற நினைப்பில் நனைந்தபடி வரவேற்ப்பறை வந்தாள்.

வந்து வெடுக்கென்று திறம்பி முகக்கண்ணாடிக்கு முகம்கொடுத்தால். பார்த்தால்  பார்க்கத் தூண்டும் முகமில்லை என்றாலும், 'பரவாயில்லை முகம்' போல் தோன்றிற்று.

மின்னல் வேகத்தில் விலகியிருந்த முடிகளை விரலுக்குள் வரவழைத்து, காதுக்குள் கவ்வ வைத்தாள்.

மறுமுறை மங்கிய குரலில் மனமின்றி ஒலித்தது அதே கதவு அழைப்பு மணி.

பாய்ந்தடைந்தாள் வாசற்கதவை,
கதவை திறந்தாள்,
இன்னும் அகலமாய் திறந்து,
அவள் கண்களும்.

பிறகு வாய் திறந்து 'அப்ப்பா!!!!!!!!!!!!' என்கிறாள்.
எதிரே நிற்பது, கதர் சட்டை, கதர் வேஷ்டி அணிந்த, திருநீர் இட்ட, சிரித்த முகம் கொண்ட, இவளின் மொத்த சந்தோசத்தின் முழு உருவம் வேலாயிதம்.

உள்ள வாங்க அப்பா, உள்ள வாங்க...என்கிறாள்.
நல்லாயிருகையாடா செல்லம்? பார்க்கணும்போல இருந்தது, அதுதான். என்றார். அடுத்த வினாடியே, அடடா மறந்துட்டேனே, ஒரு நிமிஷம் ம்மா, என்று படியை நோக்கி ஓடுகிறார்...

சரிப்பா என்று லோகநாயகி சர சர வென்று வராந்தா செல்கிறாள். சோபாவில் கசங்கியிருந்த துணியை சரிசெய்கிறாள், எரைந்திருந்த நோட்டு புத்தகம், நியூஸ் பேப்பர், ஒழுங்கு படுத்துகிறாள்.

பிறகு முகம் கழுவி, புதுப்பொட்டிட்டு, கதவடைந்து காத்துக் கொண்டிருக்கிறாள்,  அப்பாவிற்காக.......

வெகுநேரமாகியும் வந்தவர் காணவில்லை. யோசிக்கமுடியாமல், கதவை சாத்திவிட்டு, லிப்ட் பிடித்து தரைத்தளம் வருகிறாள்.

வந்து, வாட்ச்மன், வாட்ச்மன், செத்த நேரமும்பு ஒரு பெரியவர் வந்தாரா? என்று தமிழ் தெரிந்த ஒரே வாட்ச்மனிடம் கேட்கிறாள்.
யாரம்மா சொல்லுறீங்க?
அதுதான் பா, கதர் சட்டை, கதர் வேஷ்டி?
ஒ! வேலாயுதும் ஐயாவா? எனக்கு அவர நல்லாத் தெரியும்மா. ஆனா அவரு வரலையே....
இடைமறுத்த லோகு, இல்லப்பா வந்தாரு, உனக்கு தெரியல, விடு....
அட நீவேரம்ம்மா, அவரு எப்ப வந்தாலும், போனாலும், கொறஞ்சது முப்பது ரூவாவாவது கொடுப்பாரும்மா, அதோட குடும்பங்குட்டி பத்தி விசாரிப்பாரு. காலையில ஏழு மணியில இருந்து இந்தப்பக்கம், அந்தப்பக்கம் போற மாதிரியா இருக்கு இந்த அபார்த்மென்டுல வேல,  யார குத்தன்சொல்லி என்ன பண்றது,  எல்லாம் என் தலைவிதீன்னு ராகம் பாட ஆரம்பித்தவனை! 
அட அதை விடுங்கன்னு, உரையாடலை இடையே உருவிவிட்டு  நகர்ந்தாள்.

கையில் மொபைல் இல்லை, அவசரத்தில் மொபைல் எடுத்துவர மறந்துவிட்டாள். ஏறிப்போய் போன் செய்ய பத்து நிமிடம்மாவது ஆகுமே என்பதால், கீழே இருந்த பொது தொலைபேசியிலே கடன் சொல்லி சுகவை அழைத்தாள்.

போனெடுத்த சுகு, என்ன்னம்ம்மா, அதுகுல்லியும்... ம்ம்ம் சொல்லுன்னு பதில் வந்தது.
ஒண்ணுமில்ல சுகு, அப்பா வந்தாரு இப்ப, ஒரு  நிமிசம்ம்ன்னு, கிழே வந்தாரு, எங்க போனாருன்னே தெரியல.
அப்படியா? சரி, நானே திரும்ப கால் பண்ணுறேன், உன் மொபைல் எங்க?
வந்த அவசரத்துல எடுக்க மறந்துட்டேன், நீ இதுக்கே கூபிடேன், வச்சுட்டா!

இருமணிதுளிகளில், சுகுவின் அழைப்பு, என்ன லோகு, அப்பாவும், அம்மாவும் பல் டாக்டர பார்க்க பந்திர குர்ர்லாவுல காலை ஒன்பது மணியிலிருந்து இருக்காங்களாமே?
ஹே, சுகு, அப்பான்னு சொன்னது, எங்க அப்பாவ, மாமாவ இல்லை!
ஒ! சாரி..வச்சிடு கூப்பிடுறேன்.

மாமாவின் மொபைலுக்கு அழைக்கிறான் சுகு.
பல ரிங்குகள் போய், கால் எடுத்தார்.
அவர் குரல் கேட்டகவில்லை. ஒரே லாரியும், பஸ்சும், ஜனங்களின் சத்தமும், ஒய் ஓய்ந்னு ஏதோ சத்தமும், முருகன் கோயில் பக்தி பாடல்களுமே கேட்கிறது, வெகுநேரமாகியும் எவரும் பேசுவாரில்லை.

காலை துண்டித்து, லோகுவிற்கு அடித்தான், விளக்குகிறான்.
லோகு சொன்னாள், எங்கப்பா எப்பவுமே இப்படித்தான், காலை எடுக்கத் தெரியாது, சில சமயம் எடுப்பார் ஆனால் எடுத்த கால், கட்டாகி விட்டது என்று நினைத்து மேல் பாக்கெட்டில் போட்டுக்கொள்வார்...இது வாடிக்கை என்றாள்.

மொபைலில் பேசிக் கொண்டிருக்கும்போது இடை மறுத்த, குசும்பு குமார் (சுகுவை வெறுப்பேற்றும் ஒரே நண்பன், பள்ளி ஆரம்பித்து அலுவலகம் வரை பின்னே தொடர்கிறான் ஒரு இருபத்து  ஏழரை நாட்டு சனி போல).
என்ன சுகு என்னாச்சு?
ஒண்ணுமில்ல மச்சி, மாமாவ காணம்கிரா உன் தங்கச்சி!
யாரு லோகு அப்பாவா?
ஆமாண்டா.
அவர கொஞ்ச நேர முன்னாடி தான் 'வாஷில' உங்க வீட்டு பக்கத்தில் உள்ள அமர் ஜெவ்லேரி வாசல்ல பார்த்தேன், சாயங்காலம் ஆத்துக்கு வா பேசலாண்டா அம்பினார்.
ஒ! அப்படியா. சரி டா, தேங்க்ஸ்.
ஹே லோகு, கேட்டியா, குமார் சொன்னத?
ம்ம்ம் சுகு, கேட்டேன். இப்போ தான் நியாபகம் வருது, அம்மா சொன்னா, நிவியோட அஞ்சாம் பர்த்துடேவுக்கு ஒரு பவுன் சங்கிலி போடுறதா இருந்தாளாம். அதுக்க்கு தான் இப்படி ஒடுனாரா, எங்க அப்பாவ திருதாவே முடியாது!

சரி சுகு, நீ வந்து இப்போ அமர் ஜெவேல்ரிக்கு வரியா ப்ளீஸ்... நாமும் சேந்து செலக்ட் பண்ணுவோம் நம்ம குட்டி பிசாசுக்கு?
சரி வந்து தொலையிறேன், லாப வேலையாச்சே.

லோகு அபார்ட்மென்ட் ஆட்டோவில் ஏறி அமர் ஜெவ்லேர்ஸ் செல்கிறாள்...அப்போது அவள் வீட்டு போனும், மொபைலும் மாறி மாறி அலறி,
பிறகு அமைதியானது.

அதே சமயம் சுகுவும் மொபைலை சுவிட்ச் ஆப் செய்தான். வேலை நேரத்தில் வெளியே சென்றால் சுவிட்ச் ஆப் செய்வது வழக்கம்.

இருவரும் நகை கடை வந்து சேர்ந்தனர். ஆனால் கடையில் அப்பாயில்லை, விசாரிப்புகளும் விளக்கவில்லை.

ஒன்றும் புரியாமல், மொபைலை  ஆன் செய்தான். அதில் மூன்று வாய்ஸ் மெய்ல்கள். முதலாவதை தேர்வு செய்து காதில் வைக்கிறான்.
குமாரின் குரல்....
'ஏப்ரல் மாசத்துல பூல் பண்ணுவது அந்த காலம்,
நேரம் பாத்து நோகடிப்பது இந்த காலம்......ஹிஹிஹிஹி'
சுகுவின் கருத்த முகம் சிவந்தது...பின்பு சீரியசும் ஆனது.

என்ன லோகு வேலை நேரத்துல அப்பா வந்தாரு, ஆட்டுக்குட்டி வந்தாருன்னு, எரிச்சலமூட்டுற....
சுகு, கோவப்படாம எங்க வீட்டுக்கு ஒரு தரம் கால் பண்ணு ப்லீசுன்னு கண்ணம் தடவினா.

'அடிக்க அடிக்க அம்மியும்  நகரும்,
தடவ தடவ(சுண்ணாம்பு) நாக்கும்  சிவக்கும்..'  என்ற தலையணை மந்திர வித்தை, சுகுவை சுக்குநூறாக சிதைத்து, மீண்டும் அவன் முகம் கருத்த முகமாயிற்று.

இப்போ நான் என்ன லோகு பண்ணனும், சொல்லு????......சுதாரித்து சரி சரி போன் பண்ணுறேன்னு, லோகு வீட்டுக்கு கால் செய்தான்.

ரிங் ஓயாமல் அடிக்கிறது, எடுத்து பேச ஒரு துடுப்பு கூட இல்லை.  கடுப்பாகி மணி பார்த்தால்... மணி 11 : 30 .......

சுகுவின் மொபைல் சிணுங்குகிறது,
அழைப்பு வந்தது.
வந்த அழைப்பு திருச்சியில் உள்ள ஒரு
அரசு மருத்துவமனையிலிருந்து.

சொன்ன செய்தி,
சுமார் 10 : 25 க்கு ஒரு மோட்டார் விபத்தில்
அகால மரண மடைந்தார்,
வேலாயிதமென்று!!!!!!

No comments:

Post a Comment