நடு இரவில் ஐயோ என்று ஒரு அலறல்!
திடுக்கிட்டு எழுந்து , என்னாச்சு என்றேன் ,
அணித்திருந்த கம்மல் ஒன்று காணவில்லை
என்றாள் என் அன்பானவள் .
சில மணித்துளிகள் முன்பு ,
காதோடு கம்மலை கவ்வியிருந்தாளாம்
என் கண்மணி .
விழுந்தது இடி என் பிடறியில்!!!!!!!
அந்தநேரம் பார்த்து,
தும்மலோடு துவண்டு எழுந்தால் என்
ஒரு வயது உயிர் நாதம்.
விழிங்கிவிட்டாலோ கம்மலை ?
உதித்தது என் மனத்தில் !
உடனே படர்ந்தது உடலெங்கும் வியர்வை .
ஆச்சிரியக்குரியோடு (!) இருந்த என்
மகளை , ஆங்கில 'i' யாக மாற்றிப்பார்த்தேன் .
குடித்த பால் அனைத்தும் படுக்கையில்
படர்ந்தன , ஆனால் கம்மல் மட்டும்
அகப்படவில்லை .
யோசித்துப்பார்த்தோம் :
இவளின் நகைச்சுவை உணர்வை அதிககப்படுத்த ,
நகையை சுவைத்திருப்பாளோ ? அல்லது
நகைப்பற்று அற்றுப்போக ,
உண்டிருப்பாளோ ? அல்லது
காதணி விழாவில் கண்ணீர் சிந்திய
வஞ்சத்தை தீர்த்துக்கொண்டாளோ ?
தெரியவில்லை எங்களுக்கு , மருத்துவட்சியை
அணுகினோம் தெரிந்துகொள்ளாம்ென்று .
ஆராய்ந்து பார்த்து அகப்படவில்லை ,
பயப்டவேண்டாம் என்றாள் .
ஆனதமடைந்தோம் . ஆனால்
பிஞ்சு பதுமை பயத்தோடு பார்த்தது .
பயத்தின் அருமை புரிந்தது எனக்கு
ஆனால் மழலையின் மனதை
மாற்றத் தெரியவில்லை .
இதேபோல் கம்மல் , ஊசி , பாசி , காசு ,
மோதிரம் தொலைத்த பெற்றோருக்கு
இதை சமர்பிக்கிறேன் .
Subscribe to:
Post Comments (Atom)

This one is so close to my heart for the kid described... These 3 sentences makes the spice..
ReplyDeleteஇவளின் நகைச்சுவை உணர்வை அதிககப்படுத்த ,
நகையை சுவைத்திருப்பாளோ ? அல்லது
நகைப்பற்று அற்றுப்போக ,
உண்டிருப்பாளோ ? அல்லது
காதணி விழாவில் கண்ணீர் சிந்திய
வஞ்சத்தை தீர்த்துக்கொண்டாளோ ?
I'm afraid of the last points consequence :-)
Wonderful thought... I learnt about your sense of humour everywhere which was thrown very subtly...
ReplyDeleteThanks Janani and Jesse.
ReplyDeleteungal unarvukal unarchikarama ullathu...!
ReplyDelete