கடவுளுக்கு அடுத்தபடி
மானிடர்களுக்கு புண்ணியம் சேர
பிச்சை பெற்ருக்கொள்கிறேன்.
நீயோ என்னிடம் புண்ணியபிச்சை
அல்லவா கேட்கிறாய்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?
பிறரின் மிச்சத்தை மட்டுமே
உண்டுகொள்கிறேன்,
சர்க்கரை நோய் அண்டவே அண்டாது.
நீயோ மருத்துவரிடம் நிவாரணபிட்சை கேட்கிறாய்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?
லட்சத்துக்காக[பொருள் பிச்சை]
பலரிடம் லட்சியதையும்,
சிலரிடம் லட்சணத்தையும்,
அடகுவைகிறாய்.
எனக்கோ லட்சியமும் கிடையாது
லட்சணமும் கிடையாது.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?
ராத்திரியில் தூக்கம் துரத்துவர் [நிம்மதி பிச்சை]
சில திவாண்கள், எனக்கோ
தூக்கம் வந்தாலோ, துண்டு
விரித்துவிடுவேன் நின்றயிடத்திலேயே.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?
அழகு ஆபத்து தான், அதை அறிந்த
என்னுடைய அரைமுகம் தாடிக்குள்லே
தவம் செய்கிறது.
நீயோ அழகு பிச்சை கேட்கிறாய்
அழகுநிலயத்தில்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?
மழை வந்தால் மட்டுமே குளியல்.
ஆம் தண்ணீர் பஞ்சத்தை தடுக்க என் பங்கு இது.
நீயோ தார்மீக பொருப்பின்றி தட்டிக்கலிகிறாய்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?
இயற்கையோடே இல்லறம்,
இதன்மூலம் சில இனப்படுகொலைகளை
இல்லாமல் செய்கிறேன்,
அதோடுகூட இனபெருகதத்தை தடுக்கிறேன்.
நீயோ இதை[இச்சை பிச்சை] மட்டும்தான் செய்கிறாய்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?
காசுக்காக ஆசையற்று, அன்னை பிரிந்து,
மனைவி மறந்து, தாய்நாடு துறந்து கணினியோடும்,
கணவான்களோடும் கட்டிபுரலவில்லை நான்.
நீயோ பணப்பிச்சை எடுக்கிறாய்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?
லாபத்துக்காக[வர்கபிச்சை] பிறரின் சாபத்தை
சம்பாரிக்கிறாய்.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?
பிறருக்காக என் வாழ்க்கையில்லை,
என் வாழ்க்கையை எவரும் சீண்டோறுமில்லை.
எனக்கு போட்டியுமில்லை,
என்னை பார்த்து பொறாமை படுவோருமில்லை.
நாளை பற்றி நினைப்பில்லை,
எந்த நாயை பற்றியும் கவலையில்லை.
நான் மட்டுமா பிச்சைக்காரன்?
யோசித்துபாருங்கள்...
Subscribe to:
Post Comments (Atom)

nice one Ganesh...
ReplyDeletenever realised this poem had so much of hidden meaning...
keep writing...
This is one nice way of saying what people run behind and how their life is worser than a begger.. Kudos.. Keep the same fire to create more poems for enthusiastic readers like me
ReplyDelete