Sunday, 17 May 2015

உங்களின் கனிவான கவனத்திற்கு

வயது நாற்பது தான்,
நியாயமாய் சந்தோசம்
கூதுகளிக்கும் பருவம் தான்.

ஆனால் எனக்கோ,
விரக்த்தி பிடித்து ஆட்டுகிறது.

எதைக் கேட்டாலும் எரிச்சல்,
எதைப் பார்த்தாலும் படபடப்பு,
என்ன செய்கிறோம், தெரியவில்லை,
எங்கே செல்கிறோம், விளங்கவில்லை.

குழம்பிக், குழம்பி
மனம் குன்றி,
மாண்டு போக முடிவாய்
இருந்தேன்.

நேற்று இரவு,
எதிர் வீட்டு தாத்தா,
குறி சொல்லுவது போல்,
"கவனமாய் இருந்தா
குழப்பம் குழம்பி ஓடிடும்"
என்றார்.

"கவனம்" என்றால் என்ன?
யோசிக்க இஸ்டமின்றி,
வலைதளத்தில் வலை வீசினேன்.
புரிந்து கொண்டேன்.

படுத்தேன்,
அயர்ந்து தூங்கி
அதிகாலை விழித்தேன்.

கவனமாய் படுக்கையை சுருட்டி,
அழகாய் மடித்து,
படுத்திருந்த இடத்தில் கால் வைத்தால்,
இதமான சூட்டில் இருந்தது.

தண்ணீர் குழாய் திறந்து,
வலது கை குறுக்கி,
தண்ணீர் நிறைத்தால்,
பல பலவென்று மிண்ணியது,
கூச்சம் விலகாத கண்களை,
தண்ணீர் இட்டு கழுவினேன்.

கழுவிய முகத்தை,
கண்ணாடியில் பார்த்தால்,
ஜொலிப்பது புரிந்தது.

கவனம் குறையாமல்,
பல்  துலக்கினால்,
பற்கள்  என்னைப் பார்த்து
வெட்கத்தில் சிரித்தது.

இதேபோல் கவனத்தோடு,
ஒவ்வொரு வேலையாய்
முடித்துவிட்டு, வெளியே வந்தேன்.

சிவப்பும், மஞ்சளும் கலந்த
வண்ணத்தில் வானம் வசீகரித்தது.
குறுக்கும், நெடுக்குமாய்
குருவிகளும், காக்கைகளும்
கூட்டம் கூட்டமாய் இடம் பெயர்ந்தபடி
இருந்தது.

எங்கோ எனக்காக ஒரு குயில்,
கூ கூ கூ என்று கூவிய நாதம்,
என்னை குஷிப் படுத்தியது.

கவனத்தை பாதையில்
இட்டு நடந்தேன்.
ஒரு வீட்டு வாசலில்
எனாமல் பெயிண்ட் இல் ஒரு கோலம்,
அதில் காய்ந்து போன நாயின் விட்டை.

கூச்சப் படாமல்,
காலால் அதை உதைத்தெரிந்தேன்.
இப்போது கோலம் கோலாகலமாய்
சிரித்தது - கூடவே அந்த வீட்டாரும்
நன்றி கூற கூச்சப் பட்டு
புன்னகை பூத்தனர்.

அடுத்த தெருவில்,
தேநீர் விடுதி,
தேர் கூட்டம்.
வரசை இல்லாத
வரிசையில் நின்று,
தேநீர் பெற்று,
அருகிலிருந்தவரிடம் அளவாடிக்கொன்டே,
கவனமாய் அருந்தினால், அலாதி சுவை.
சுவையின் சுகத்தை டீ
மாஸ்டர் இடம் சொன்னால்,
சமைந்த பெண்போல் வெட்கப் படுகிறார்.

அப்படியே,
பூக்கார அம்மாளிடம்
பூ கட்ட பழகிக் கொண்டு.
பழ வண்டி காரரிடம்
பழ நிலவரம் கேட்டு தெரிந்து,
எழனி காரரோடு
பொள்ளாச்சியை புரிந்து கொண்டு,
பேப்பர் கடையில்,
நாளிதழ் வாங்கி வீடு திரும்பினேன்.

புத்துணர்ச்சி பொங்கிற்று,
புது அனுபவமாய் தோன்றிற்று.
ஏதோ என் மனம் சொல்லத் துடித்தால்,
காது குடுத்துக் கவனமாய் கேட்டேன்...

மனம் பேசலானது....

இந்த உலகம்
எவ்வளவு அழகுடையது?
உன்னை பூமிப் பந்தில்
பிறக்க வைத்த காரணம் தெரியுமா?
அழகாய் இருக்கும் உலகத்தை,
மேலும் அழகாக்கவே!

உனக்கு கொடுத்திருப்பதோ,
குறைவான அவகாசம்.
உன் நேரம் முடிவதற்க்குள்,
பார்க்க வேண்டிய இடங்கள்,
பேசவேண்டிய விஷயங்கள்,
கற்க வேண்டியவைகள்
அனைத்திலும் ஆட்படுத்திக் கொள்.

நேரத்தை நொந்துகொண்டு,
விரயமாகாத்தே.

இங்கு நீ,
எதையும் செய்யலாம்,
எதுவாகவும் மாறலாம்,
யாரையும் மாற்றலாம்,
ஏன் இந்த உலகத்தையே மாற்றலாம்.

ஏதாவது புதியதை
கற்றுக்கொள்.
கற்றதை செயலாக்கு.
செயல் படுத்தியபின்,
வேறொன்றை புதிதாக
கற்றுக்கொள்.

வெற்றி, தோல்வியை விட
அனுபவமே அறிய பரிசு.

கவனமே அனுபவத்தை
ஆட்கொள்ளும் சூட்சமம்.

ஆகவே,
எதிலும் கவனமாய் இரு,
பாசமாய் பழகு,
நேசக் கரம் நீட்டு,
மன்னிக்கும் மனதை விசாலப் படுத்து,
மரியாதை கொடு,
நம்பிக்கை கொள்,
இயற்கையோடு கை கோர்த்து நட,
யாருடைய கோபத்தின் மீதும் கொதிப்படயாதே,
அன்பை வெளிப்படுத்த தயங்காதே,
அன்பைப் பெற்றுக்கொள்ளவும் மறக்காதே.

மதிகலங்க ஆடு,
உள்ளம் இன்புற கீதங்கள் பாடு,
வயிறு இனிக்க உண்டு மகிழு,
சத்தமாய் சிரி,
குழந்தைபோல் அழுது முடி.

வயது உன் சரீரத்திற்கே தவிர,
உள்ளத்திருக்கு இல்லை என்று உணரு.

கவனத்தோடு அன்பைப் பரப்புவோம்,
வாழும் நாட்க்களை பயனுள்ளதாய்
மாற்றுவோம்.

நிர்வாண மீன்கள்

எளிமையான வாழ்க்கை,
எதார்த்தமான நிகழ்வுகள்,
பெரிய பெரிய கனவுகளோ,
லட்சியங்களோ இல்லாத
இளைஞனாய்  இருந்தேன் - திருமணம்
முடியும்வரை.

இன்றோடு விளையாட்டுபோல்
பத்து வருடங்கள் உருண்டோடி விட்டது.

இந்த திருமண பந்தம்,
என்னென்ன மாற்றங்கள்,
என் மீது நிகழ்த்தியுள்ளது?

யோசிக்கிறேன்.....!

கண்விழிக்கும் நேரத்தில்
மாற்றமில்லை.
கண்ணயரும் நேரமும்
என் விருப்பமே.
இதில் மாற்றம் வேண்டி - என்னவள்
செல்லச் சண்டை இடுவாளே தவிர,
செங்கொடி பிடித்தாய் நினைவில்லை.

எதுவும் படிக்கலாம்,
எப்போதும் எழுதலாம்,
இது குறைந்த நேரமே என்றாலும்,
குணவதியின் குமுறல் கேட்டதில்லை.

வாசகியாய் சிலநேரமும்,
விமர்சகியாய் பலநேரமும் செலவிட்டாலும்,
எனக்கு ஒருபோதும் திகட்டியதில்லை.

அலுவலக  அவஸ்தையோ,
நண்பர்களின் நாசவேலையோ
இல்லை நான் விரும்பியோ
நேரம் தாழ்த்தி வீட்டையும் போது
பயமின்றி உள்ளே செல்லலாம்.

ஆன்மீகப் பயணத்திற்கும்
தடை போட்டதில்லை.

நான், என் தாய்,
தகப்பனிடம் பழகும் பக்குவத்திலும்
பங்கமில்லை.

சில மாற்றங்கள்
என் வயது முதிர்ச்சியாலும்,
அறிவு முதிர்ச்சியாலும்
நிகழ்தவையே.

திருமணம் என்னை
பட்டை தீட்டவில்லை,
மழுங்கிப் போகவும் விடவில்லை.

நான் நானாகவே
இருந்கிறேன்,
அவளும் அவளாகவே
இருக்கிறாள் என்று நம்புகிறேன்.

நாங்கள் இருவரும்,
பெரிதாக ஆசைப்பட்டதோ,
பொறாமை பட்டதோ,
பணத்தை சேர்க்க திட்டம் தீட்டியதோ,
சேர்த்த பணத்தை முதலீடு செய்ததோ,
ஆதங்கபட்டதோ, தோல்வியில் துவண்டதோ,
வெற்றிகளில் வெறி கொண்டு ஆடியதோ,
இல்லையென்று தீர்க்கமாய் கூறுவேன்.

இது சரியான வாழ்க்கை முறையா?
தெரியவில்லை.

ஆனால்,
ஒன்றே ஒன்றை,
நிதம் நிதம் பின்பற்றுவோம்,
அது -
யாருடைய மனதையும்,
எதற்க்காகவும்,
எந்த சூழலிலும்,
தெரிந்தோ,
தெரியாமலோ,
புண் படுத்திவிடக் கூடாது,
என்பதில் கவனம் செலுத்துவோம்.

மற்ற நேரமெல்லாம்,
நிர்வாண மீன்கள் போல நீந்துகிறோம்,
இன்னும் நெடுந்தூரம் நீந்துவோம்..................................!

சுடு சோறு

அளவறியா அலுவல் வேலை,
அசதியில் வீடடைந்தேன்.

கை கால் முகம் கழுவி,
சொகுசு சோபாவில்
சோர்ந்தமர்நதேன்.

புத்துணர்ச்சி பெற்றிட,
முகப்புத்தகம் திறந்தேன்.

புகைப்படங்களோ புகைப்படங்கள்....!
மஞ்சள் நிற முள்ளங்கி சாம்பார்,
உதட்டை தூக்கியும்,
இறக்கியபடி செல்பிகள்,
செல்லப் பிராணிகள்,
விரைத்த புஜங்கள்,
பயந்து விழிக்கும் குழந்தைகள்
என அனைத்துக்கும் லைக்குள் இட்டேன்.

அடுத்து நண்பர்களின் நிலவரம்...!
சினிமா சென்றவன்,
ஹோட்டல் அடைந்தவன்,
காரில் இருப்பவன்,
காறித் துப்பியவனென்று,
அனைத்து அம்சங்களையும்
கண்டு ஆனந்தப்பட்டு,
ஆத்திரப்பட்டு,
ஏக்கப்பாடு,
எரிச்சல்பட்டு,
முகச் சுளிப்போடு
முகப்புதக்கத்தை மூடிவிட்டு.

கமலகாசனும், தோனியும்
இன்று என்ன செய்தார்களென்று
எட்டிப் பார்த்துவிட்டு.

ஆன்மீக சிந்தனைகளை,
அசை போட்டு விழுங்க முடியாமல்,
விழுங்கி விட்டு.

ஆயுள் முழுதும்,
அலுவலகத்தில் அசையா இடத்தை பெற்றுவிட,
முழுத் தேங்காயை உண்ண விரும்பி,
உருட்டி திரியும் நாயைப்  போல,

வலைதளத்தில் கண்டதை எல்லாம்,
படித்து புரிந்துவிட்டதாய்
நம்பிவிட்டு நிமிர்ந்தால்?
முதுகுத் தண்டில் சுளீர் என்றது.

வலி மறக்க,
தொலைக்காட்சி திறந்தேன்.

பாடலில் ஆரம்பித்து,
விவாதமேடை அடைந்து,
வீதிச் சண்டை பார்த்து,
நகைச்சுவை ரசித்து,
சமையல் நிகழ்ச்சி ருசித்து,
நாடகங்களை திட்டுவிட்டு,
ஐபிஎல் லில் கொஞ்சம் ஆர்பரித்து,
சில்மிசக் கேள்விகளில் சிக்காமல்,
செய்திகளில் வந்து நின்றேன்.

அதுவும் அலுத்துப் போகவே,
உண்ண முடிவெடுத்து,
உணவு கேட்டேன்.

சாதமும், மிளகு ரசமும்,
மொரு மொரு பாவற்காய் சிப்ஸும்
தட்டில் வந்தது.

பார்த்தவுடன் பசி பற்றிக்கொள்ளவே,
பாய்ந்து விட முடிவு செய்து,
சோற்றில் கை வைத்தேன்.

கொதி (சூடு) குறையாத சோறு,
கையை பொசுக்கி விட
ஆ! என்று அலறியபடி நிமிர்ந்தால்!

தொலைகாட்சியில் ஒரு
பஞ்சாபி விவசாயி,
நாக்கு தள்ளியபடி,
மரமொன்றில் தூக்கில்
தொங்கிக் கொண்டிருக்கிறான்.......!