Sunday, 19 August 2012

அமானுஷ்ய காதல்....!


உயிருக்கு உயிரானவன்,
உன்னதமானவன்,உறங்கிப்போனான்.

பூமிப் பந்தில்,
விளையாடி, விளையாடி, ஓய்ந்து.
விண்ணுலகில் குடி புகுந்தான்.

மறுஉயிரை ஒரே
ஒரு முறை, ஆரத்தழுவ,
என் ஆத்மா, எறி தணலில்,
எரிந்து கொண்டிருந்தது.

வழி ஏதுமுண்டோ,
என் இறந்துபோன இனியவனின்,
மூடிய விழிகளை திறந்து பார்க்க?

உண்டு என்பதுபோல் வலைதளம்,
வண்டி  வண்டியாய்,
வழிகளைத் துப்பியது.

துப்பியவற்றை துப்பு துலக்கி,
ஒரு முறையை தேர்வு செய்தேன்.
இதுகால் ஆவிகளை
அழைத்துப் பேசலாம்,
புரியாததை புரிந்துகொள்ளலாம்.

இந்த மூன்று மாதங்களும்,
பல முறை முயன்று பார்த்தேன்.
முயற்சிக்கும்போது,
சில நேரம் படுக்கையிலிருந்து,
வீசி எரியப்பட்டுள்ளேன்.
மின் விளக்குகள் அனைந்துள்ளன,
இடியுடன் கூடிய மழை,
பெய்திருக்கிறது.
பேனா எழுதுவதை நிறுத்தியுள்ளது.
குளிர் ஜுரம் கண்டுள்ளேன்.
பல மாதிரி சத்தம் கேட்கப்படும்.
நானே பலகுரலில் கத்தியுள்ளேன்.
அமுதா அமுதா என்று
என் பெயர் ஒலிக்க கேட்டுள்ளேன்.
இருந்தும் என்னவனை
மட்டும் ஈர்க்க முடியவில்லை.

நடக்கும் அனைத்தையும்
எங்கள் பொது நண்பனிடம்
சொல்லுவேன்.

மெளனமாக கேட்டபின்,
பேய் போல் சிரிப்பான் ரவி.

ரவிக்கு சாமி, சாமியார்,
பேய், நம்பூதிரி,
ஆவி, மறுஜென்மம்,
போன்ற எதையும்
நம்பாத நாஸ்திகன்.

ஆனாலும் நல்லவன்,
தன்னலமற்றவன், அழகானவன்,
அன்பானவன், பாடகன்,
பலகுரல் மன்னன்,
தேக ஆரோகியம் கொண்டவன்,
தெளிவானவன்,
பார்பவர்களை வஸ்யம் செய்யும்
வதனமுடயவன்.

ரவிக்கு நாங்கள் இருவர்
தான் உன்னத உலகம்.
அதுவும் சாலை விபத்தில்
சாய் இறந்த பிறகு,
என்னோடு இன்னும் இனக்கமானான்.

கடந்த ஒரு வாரமாக
கடுமையான விரதமிருந்து,
அமாவாசையான இன்று
மேலுமொரு முறை முயற்சிக்க
ஆயத்தமானேன்.

தவறாக அரங்கேறினால்,
சில கெட்ட ஆவிகள் தரிசித்து,
தும்சம் செய்துவிடுமாம்.

ஆகவே துணைக்கு
ரவியை அழைத்தேன்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டே,
சற்று யோசித்த பின், சிரித்துக்கொண்டே
சம்மதித்தான்.

இரவு பத்து மணிக்கு ரவியும்
வந்தான்.
வீட்டை சுத்தாமாக பெருக்கி,
துடைத்து, சாணம்  கொண்டு மெழுகி,
குளித்துவிட்டு, முகமுழுதும்
மஞ்சள் பூசி, குங்குமத்தில்
பெரிய பொட்டிட்டு,
காவி நிற ஈர பொடவை
கட்டிக்கொண்டு அமர்ந்தேன்.

எதிபுறத்தில் ரவி அமர்தான்.
மெழுகுவர்த்தி, ஏற்றிய திரி விளக்கு,
கற்பூரம், விபூதி, தேங்காய்,
சொம்பு நிறைய தண்ணீர்,
தீப்பெட்டி, ஊதுபத்தி,
ஒரு காலி சில்வர் டம்பளர்,
மற்றும் சாயின் புகைப்படம்
கொண்டு பூஜை ஆரம்பித்தேன்.

மணியோ இரவு 11 :30 ,
அமாவாசை இரவு,
வீட்டின் வெளியே கும் இருட்டு,
வாசர்கதவும், ஜன்னல்களும் திறந்திருந்த
வண்ணம், முதல் சடங்கை ஆரம்பித்தேன்.

ஒரு கரித்துண்டு கொண்டு,
தரையில், A ,B , C , z வரை
வட்டமாக எழுதி,
இடதுபுறம் சரி என்றும்,
வலதுபுறம் தவறு என்றும்
எழுதி, ரவியை பார்த்தேன்
சிரிக்காமல் சிலையாய் இருந்தான்.

கையில் புகைப்படம் எடுத்து,
புஸ்தகங்களில் சொன்னது போல்,
ஜபித்தேன், என்றுமே இல்லாததுபோல்,
நடுக்கமோ நடுக்கம்,
ஏனோ என் உடல் அதிர்வை
சமாளிக்க சங்கடப் படுகிறது.

உதறலோ உதறல்,
ரவி என்னையே உற்றுப்
பார்கிறான்.
டம்ப்ளரை தலைகீழ்
கவுழ்த்தி, சுட்டு விரலை
மேல்வைத்து, அழுத்திகொண்டே,
சாய் என்னோடு பேசுவாயா?
என்றேன்.

உடல் கொஞ்சம்
உலுக்கி விட்டு,
தானாக டம்பளர்
என் விரலையும் இழுத்துகொண்டே
சென்றது.
கொஞ்சம் நகர்ந்து நகர்ந்து
சரியிடம் சென்று நின்றது.

இப்போது மகிழ்ச்சியைவிட
பயமே மேலோங்கி
இருந்த வேலையில்,

விளக்கு அனைந்தது,
அடுத்த வினாடி,
டமார் என்று சத்தம்,
பயந்த நான் எகுறி எழுதேன்,
தவறி விளக்கில் கால் வைத்து,
ரவியின் மேல் வழுக்கி விழுந்து,
பயத்தில் இருக்க கரம் பற்றினேன்.

ஆ! ஆ! என்று அலற
ஆரம்பித்த ரவி, பேசத் தொடங்கினான்.

நான் தான் பேசுகிறேன்,
என்றான்.
யார் நீ என்றேன்?.
உன் முன்னால் காதலன்
என்று சாயின் குரலில்
கூறினான்.

கோபம் கொப்பளித்த நான்,
சாய் இன்று வரை, உன்னையே
காதலிக்கிறேன், உன் நினைவிலே
வாழ்கிறேன் என்றேன்.
மௌனமே பதில்.

இன்னும் நம்பவில்லையா? என்று
சாயை இருக்கத் தழுவினேன்.
சாயும் பழைய நினைவுகளை,
ஒன்றன் பின், ஒன்றாக நினைவு கூர்ந்தான்.
நெகிழ்ச்சியில் கொஞ்சம் திழைதிருந்தோம்.

கண்ணீர் மழ்க, மழ்க
என் வாழ்வில் உன்னைத் தவிர,
வேறு  யாரையும் காதலிக்க
மாட்டேன் என்றேன்.
நானும் நெடு நாட்களாக உன்னையே,
உன்னை மட்டுமே காதலிக்கிறேன்
என்றான்.
ஆனால் இந்த முறை ரவியின் குரலில்..........!

கலகலப்போ கலகலப்பு.........


லண்டனில் சுமார் மூன்று வருடங்கள்,
ஐடி துறையில் பணிபுரிந்து,
புது வீசா எடுக்க என் சொந்த ஊரானா,
சென்னைக்கு வந்துள்ளேன்.

வந்த இடத்தில் என் ஹிட்லர்
அப்பா, கார் லைசென்சு எடுத்துத்
தொலைஞ்சாலென்ன? என்று
விடாமல் தொன தொனத்ததால்,
ஒரு போராளி போல் இன்றைய
தினத்தில் போராடப் போகிறேன்.

காலை பத்து மணிக்கு,
படுகையில் இருந்து,
பாய்ந்து எழுந்து,
அவசர அவசரமாக,
பல் தேய்த்தும் தேய்காமலும்,
முகம் கழுவியும் கழுவாமலும்,
தலை முடியை கையால் கோதி,
கிடைத்த கசங்கிய டி-சர்ட்டை மாட்டி,
அணிதிருந்த டிராயரோடு,
ஆடோ பிடித்து, ஒன்பது மணிக்கான,
ட்ரிவிங் லைசென்சு தேர்வுக்கு ஓடினேன்.

தேர்வு இடத்தில், தேர் கூட்டம்.
இவர்களெல்லாம் லைசென்சு எடுக்க
வந்தவர்களா? இல்லை எடுப்பவர்களை
கண்டு களிக்க வந்தார்களா?
என்ற சந்தேகம் வந்தது.

தம்பி கோவாலு என்ற சத்தம் கேட்டு,
திரும்பி பார்த்தால், ட்ரிவிங் ஸ்கூல்
அண்ணாச்சி அசோக்.

ஏம்பா லேட்டுன்னு கேட்டு
எச்சிலைத் துப்பினார்.
எதிர் காத்தால் அவர் எச்சில்,
என் இடது கையை நனைத்தது.
பரவாயில்லை என்று டிராயரில்
துடைத்துக்கொண்டேன்.

இன்ஸ்பெக்டர் வந்தாச்சா என்று
வினவினேன்.
அவர் வரும்போதுதான் வருவார்,
என்று திரும்பவும் எச்சிலைத் துப்பினார்.
இந்தமுறை உஷாரான நான்,
கைகளை மேலே தூக்கினேன்,
ஆறடி உயரமென்பதால்,
அருகில் இருந்த பூவரசமர விழுதில்,
விரல் பட்டு வீங்கியது.
பாத்துடா தம்பீன்னு பக்கத்துல வந்து
பொளுசுன்னு துப்பினார்,
நான் கண்களை இருக்க மூடிக் கொண்டேன்.

அப்ளிகேசன் பூர்த்தி செய்யும்போது,
கிஷோர் என்ற நண்பர்,
தம்பி அப்பளை பண்ணும்போது,
லாரி லைசென்சும் சேர்த்து வாங்குற
மாதிரி பாருங்கோன்னு அறிவுரை சொன்னார்.
ஒன்றும் புரியாததால், என் என்று கேட்டேன்?
தனக்கு தெரிஞ்ச லாரி ஆபீச்ல வேலை வாங்கித்
தரேன்னு சொன்னார்.
நான் அப்படியே அவமானத்துல அமுங்கிப் போனேன்.

இன்னொரு நண்பர் சரவணன்.
பெர்மிட் லைசன்சு வாங்குவது
நல்லது என்றார்.
நீங்க வாங்குலையா, என்று கேட்டதற்கு?
அதற்கு பத்தாவது பாசாகி இருக்க வேண்டுமென்றார்.
கொஞ்சம் சந்தோசமாக இருந்தது,
கடைசியில் இவராவது நான் பத்தாவது
படித்தவன் என்று நினைகிறாறே என்று.

எப்படியோ இன்ஸ்பெக்டர் கோகுலக்ரிஷ்ணன் வந்தார். கூட்டத்தில் இருந்த பத்துப் பேரை அழைத்து, எட்டு போடச் சொன்னார்.
முதலில் சென்ற மூவரும் போட்டனர்.

நான்காமவர் ரங்கா, பாதி வட்டத்திலேயே,
தரயில் பாதம் பதித்தார்.
புத்திசாலியா தெரியிரப்பா, இப்படி
தப்பு பண்ணிடையே, சரி கேள்விக்காவது
பதில் சொல்லுன்னு கேட்டார்.

வலது பக்கம் செல்ல, என்ன செய்வ?
வலது கை காட்டுவேன்.
இடது பக்கம் செல்ல, என்ன செய்வ?
இடது கை காட்டுவேன்.
நேரா செல்ல, என்ன செய்வ?
நேரா கைய காட்டுவேன்னு சொன்னார் ரங்கா.
கடுப்பான இன்ஸ்பெக்டர்,
அப்படியே நிக்காம, நேரா போயி,
அந்த அரச மரத்துல முட்டிகோன்னு
சொல்லி, அடுத்தவன கூப்பிடார்.

வந்த சுதாகர் ரொம்ப சின்ன பையனா தெரிஞ்சார்.
தம்பி நீ வண்டி ஓட்டவேண்டாம்,
கேள்விக்கு மட்டும் பதில் சொல் என்றார்.
அதாவது ஆல் இல்லாத ரயில்வே
கிராசிங் பார்த்தால், என்ன செய்வாய்?
ரொம்ப யோசிச்ச சுதாகர்,
எங்க அம்மா அந்த மாதிரி
இடத்துகெல்லாம் விடமாட்டாங்க சார்ன்னு சொன்னான்.
பொலேர்ன்னு கண்ணத்துல விட்டு,
போய்ட்டுவா சாமின்னு இன்ஸ்பெக்டர்
அனுப்பிவிட்டார்.

இன்ஸ்பெக்டர் எங்கபக்கம் திரும்பி,
நாலு பேர் காருல ஏருங்கோன்னு சொன்னார்.
திபு துபுன்னு நாங்க ஏறினோம்.

மொதல்ல ஆனந்த,
கார ஸ்டார்ட் பண்ணி,
ஒட்ட ஆரம்பித்து,
இரண்டு கீர் தாண்டி,
மூணாம் கீரில் வண்டி ஓடிக் கொண்டிருக்க,
இன்ஸ்பெக்டர் நியுட்ரல் செய்ய சொன்னார்.
அவசரத்தில் ஆனந்த கீரை மாத்த முனைதார்.
மொதல்ல க்ளட்ச்ச அமுத்துப்பான்னு, பொறுமையா சொன்னார்.
ஆனந்த கீழே குனிந்து க்ளட்சை தேட ஆரம்பித்தார்.
இன்ஸ்பெக்டர் காலரை பிடித்து இழுத்து,
கீழே இறங்கி தேடச்சொல்லி, அடுத்தவனை அழைத்தார்.

ராஜேஷ் ஸ்டார்ட் செய்தார்.
முதல் கீர் போட்டார்,
இன்ஸ்பெக்டர் வழி மறுத்து,
காரை இன்ச் இஞ்சாக நகர்த்த சொன்னார்,
மேலும் ஒரு இன்ச் எவ்வளவு இருக்கும் என்றார்.
யோசித்த ராஜேஷ், கொஞ்சம் எட்டிப் பார்த்து,
சார் கார் முன்னாடி ஒரு கல்லு தெரியுது
பாருங்க அவளோ தூரம் இருக்கும் என்றார்.
ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர், நீயெல்லாம்
என்னத்த படிச்சு கிளிச்சயோன்னு இறக்கி விட்டார்.

அடுத்தவர் விவேக். எங்கள் காரின் பின்னாலே
அவர் சொந்த காரில் வலம் வந்தவர்.
இப்போது இந்த காரில் ஏறினார்.
அமர்ந்தவுடம், கார் சீட்டை சரி செய்தார்,
உல் கண்ணாடியை சரி செய்தார்,
வெளிக் கண்ணாடியை செய்தார்,
சீட் பெல்ட் எங்கே என்று கேட்டார்.
இன்ஸ்பெக்டர் ஒரு கையை மேலே
தூக்கி முதல்ல வண்டிய ஓட்டுன்னு சொல்லாம சொன்னார்.
முதல் கீர் போட்டு எடுக்கும் போது,
வண்டி திமிறி திமிறி நின்றது,
இறங்கி போய்விடு என்றார்.
சார் நான் ரெண்டு வண்டிக்கு ஓனர் என்றார் விவேக்.
ஒனர்ணா ஓரமா போயி நில்லு,
குறுக்க குறுக்க பேசாத என்றார்.

அடுத்து வந்தவர்,
சார் நான் மணி, ஒரு எம் என் ஷி ல
மேனேஜெரா இருக்கேன் என்று
பேசிகொண்டே வண்டி ஓடினார்.
பேச்சு மும்மாரத்தில் எதிரில்
வரும் மாட்டை கவனிக்கவில்லை.
மேனேஜெர் மாடு, எரும மாடு மேனேஜெர்,
என்று நான் கத்தினேன்,
மணி பதரி, யு டர்னில் மோதி நின்றது.
இன்ஸ்பெக்டரின் தொப்பை,
டாஷ் போர்டை நசுக்கியது.

கடைசியா சென்றேன் நான்.
என் போறாத நேரம் யு டர்னில்
இருந்து வண்டியை கிளப்ப வேண்டும்.
எப்படியோ கீர் போட்டு,
சுனாமி வேகத்தில் வண்டியை கிளப்பினேன்,
கடவுள் புண்ணியத்தில் வண்டியும் ஓடியது.
களைப்பில் இருந்த இன்ஸ்பெக்டர்
போதும் நிறுத்து என்றார்.
அவரைக் கொஞ்சம் கவர நான் ,
சார் இன்டர்நேஷனல் லைசென்சு எடுக்க
என்ன வேண்டும் என்றேன்,
என்னையும் என் உடை அலங்காரத்தையும்
மேலும் கீழும் பார்த்த அவர்,
அதற்கு முதலில் பாஸ்போர்ட் வேண்டும்
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்!!!!